‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’.. சென்னை மாநகராட்சியின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டத்தை சென்னை மாநகராட்சி தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் பாஸ்டர் மார்க் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்' கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சுமார் 350 பள்ளிகளில் இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் 65ஆயிரம் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், காலை உணவு தயாரிப்பை தனியார் நிறுவனத்துக்கு வழங்க சென்னை மாநகராட்சியால் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை கண்டனத்திற்குரியது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக தமிழக அரசு கூறிவரும் நிலையில், திட்டத்தின் உணவு தயாரிக்கும் பணியை தனியாருக்கு தாரை வார்ப்பதன் மூலம், அதற்கான பணிகளில் ஈடுபட்ட சுய உதவிக்குழு மகளிர் பணியிழக்க நேரிடும். மேலும், தனியாருக்கு திட்டத்தை தாரை வார்க்கும் போது உணவின் தரம் குறைவதற்கும், அதன் மூலம் திட்டத்தின் நோக்கம் சீர்குலைவதற்கும் வாய்ப்பு ஏற்படும்.
அந்தந்த பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுவினர் மூலமாக மாணவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் போது சரியான நேரத்தில், சூடாக கிடைத்துவந்த காலை உணவு, 356 பள்ளிகளை சேர்ந்த 65 ஆயிரம் மாணவர்களுக்கு மையப்படுத்தப்பட்ட சமையல் கூடங்களில் தனியார் நிறுவனம் மூலம் தயாரித்து வழங்கும் போது, மாணவர்களுக்கு சரியான நேரத்தில், ஆரோக்கியமான முறையில், சூடாக கிடைக்குமா என்கிற சந்தேகம் எழுகிறது. இது காலை உணவுத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும்.
கடந்த காலங்களில் அரசின் திட்டங்களை தனியாருக்கு தாரை வார்த்ததை கண்டித்த திமுக, ஆட்சிக்கு வந்த பின்னர், தனியாருக்கு தாரை வார்க்கும் செயல்திட்டங்களை தொடர்ந்து கடைபிடிக்கத் தொடங்கிவிட்டது. இது திமுகவின் இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிறது.
ஆகவே, பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் சென்னை மாநகராட்சியின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்தி, ஒருங்கிணைந்த சமூக நலத் திட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றிட வேண்டும் என கேட்டுக்கொள்வதோடு, அரசின் திட்டங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications