2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்! விஜய்யின் முதல் கையெழுத்து
சென்னை: தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜய் கட்சியான தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்தன. இந்த நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் விஜய் கட்சிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளன.

இதனால் தவெகவின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் ஆதரவு அளித்த கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விஜய் ஆளுநர் மாளிகை சென்றார். ஆனால் ஆளுநர் கேரளா செல்வதாக கூறப்பட்டது. இதனால் விஜய் திரும்பி வீட்டுக்கு சென்றார்.
பின்னர் ஆளுநரின் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து விஜய் ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கிருந்து ஆட்சி அமைப்பதற்கான கடிதத்தையும் விஜய் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் விஜய் இன்று காலை 10 மணிக்கு முதல்வராக பதவியேற்கிறார்.
இந்த நிலையில் அவர் போடும் முதல் கையெழுத்து எது என்பதை பார்க்கலாம். 200 யூனிட் மின்சாரம், அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், மகளிர் உரிமைத் தொகை ரூ 2500, மதுவிலக்கு உள்ளிட்ட மக்கள் நலனை கருத்தில் கொண்டு அவர் முதல் கையெழுத்தாக போடுவார் என தெரிகிறது.
முதல்வரானதும் 5 ஆண்டுகளில் எத்தனை கோப்புகளில் கையெழுத்திட்டாலும் முதல் கையெழுத்து என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
2016-ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற போது 500 மதுக்கடைகளை மூடல், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட ஐந்து திட்டங்களில் முதலில் கையெழுத்திட்டார்.
அதேபோல் 2021-ல் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதியேற்றதும் முதலில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், ரூ.4000 கொரோனா நிதியுதவி, ஆவின் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திட்டார்.
அந்த வகையில் விஜய்யும் முதல் கையெழுத்தாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கையெழுத்திடுவார் என சொல்லப்படுகிறது. தமிழக முன்னாள் முதல்வரான ஸ்டாலின், புதிய அரசு காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications