ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு! இதற்கு மேல் தள்ளிப்போட வேண்டாம்! OK சொன்ன உதயநிதி ஸ்டாலின்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக இளைஞரணி மாநாடு ஏற்கனவே 2 முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் இப்போது 3வது முறையாக தேதியை தேர்வு செய்து திமுக தலைமைக்கழகம் மூலம் அறிவிப்பு வெளியிட வைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

டிசம்பர் 17ஆம் தேதி தேதி திமுக இளைஞரணி மாநாடு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னை மழை வெள்ளம் காரணமாக டிசம்பர் 24ஆம் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகளால் மீண்டும் தேதி குறிப்பிடப்படாமல் திமுக இளைஞரணி மாநாடு தள்ளி வைக்கப்பட்டது.

Chief Minister Stalin make important decision about Dmk youthwing conference

இந்நிலையில் மாநாட்டை இனிமேலும் தள்ளிப்போட வேண்டாம் என நினைத்த திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், திமுக இளைஞரணி மாநாடு வரும் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியிட வைத்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைமைக்கழகம் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு; "மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு, வருகிற 21-01-2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலத்தில் நடைபெறும்.''

இதனிடையே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி மாநாடுக்காக 100 ஏக்கர் பரப்பளவில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இளைஞரணி மாநாட்டு மேடையிலேயே நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கும் வகையில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் இருந்தும் சுமார் 5 லட்சம் இளைஞர்களை மாநாட்டிற்கு திரட்டும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

திமுகவில் எத்தனையோ சார்பு அணிகள் இருந்தாலும் அதில் பிரதான அணியாக விளங்குவது இளைஞரணி மட்டுமே என்பது கூடுதல் தகவலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+