டாக்டர்கள் பேச்சை மீறிய முதலமைச்சர் ஸ்டாலின்! எவ்வளவோ சொல்லியும் கட்சிக்காரர்களுக்காக எடுத்த ரிஸ்க்!
சென்னை: கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்படும் நிலையிலும், மருத்துவர்களின் பேச்சை மீறி கட்சிக்காரர்களுக்காக ரிஸ்க் எடுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
சென்னை மண்டல திமுக பாக முகவர்கள் கூட்டம் இன்று திருவள்ளூரில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஸ்டாலினின் பேச்சை கேட்கவும் அவரை பார்க்கவும் சென்னை மண்டல திமுகவினர் பெருமளவில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு வழக்கம் போல் மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என அறுசுவை அசைவ விருந்து பரிமாறப்பட்டது.

முதலமைச்சர் ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வருவதால் அவரது பிரதிநிதியாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மண்டல திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்நிலையில்கட்சிக்காரர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதால் யாரும் எதிர்பாராத வகையில் காணொலி மூலம் தோன்றி தன் உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உரை நிகழ்த்தினார் ஸ்டாலின்.
அப்போது பேசிய அவர், ''நீங்கள் யாரும் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று கருதுகிறேன். அதிகம் பேசக்கூடாது என்று மருத்துவர்கள் கட்டாயப்படுத்தி இருக்கிறார்கள். அதை எல்லாம் மீறி வந்து இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேன். இப்போது என்னுடைய பேச்சைச் சுருக்கமாக தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.'' எனக் கூறிவிட்டு கூட்டம் முடியும் வரை அதனை காணொலி மூலம் பார்த்துக் கொண்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தாம் திமுக பாக முகவர்கள் கூட்டத்துக்கு வரவில்லை என்று சொன்னாலும் தன்னுடைய நினைவுகள் எல்லாம் அங்கு என்ன இருக்கிறது எனவும் கூட்டம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று தான் என்னுடைய சிந்தனை எல்லாம் இருந்தது எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல், இருமலால் அவதிப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின், பிரபல காது மூக்கு தொண்ட அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரனிடம் சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்விலிருந்து வருகிறார். ஓரிரு நாட்களில் வழக்கம் போல் தலைமைச் செயலகம் புறப்பட்டு விடுவார் எனத் தெரிகிறது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications