சிவ்தாஸ் மீனா போட்ட ஆர்டர்.. சிட்டாய்ப் பறக்கும் அதிகாரிகள்! பணிகள் முழு வேகம்.. இதான் முக்கியம்!
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள மீட்பு பணியில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுக்கு தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்துமாறு தலைமை செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் கனமழை பொழிந்தது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் அனைத்து தெருக்களிலும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகளின் காரணமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மக்கள் தங்கள் வழக்கமான பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். பேருந்து போக்குவரத்து சீரடைந்து உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்சார இணைப்பு வழங்கப்பட்டு விட்டது. வியாசர்பாடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தான் இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளிகளை பொறுத்தவரை பாதிக்கப்பட்ட பள்ளிக்கூடங்களை முழுமையாக சீரமைத்த பின்னர் தான் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், மீட்புப் பணி மற்றும் நிவாரணம் பணிகளில் ஈடுபட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், "பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், நகரின் ஏனைய பகுதிகளிலும் சாலைகள் மற்றும் தெருக்கள் மற்றும் திறந்தவெளிகளை போர்க்கால அடிப்படையில் தூய்மைப்படுத்த வேண்டும். தூய்மைப்படுத்திய பின்னர், பிளீச்சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். மின்சாரம் தடைபட்ட இடங்கள் மற்றும் தெருக்களைக் கண்டறிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட வேண்டும்.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்திரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன்படுத்த வேண்டும்.
பால் விநியோகம் மற்றும் பிற இன்றியமையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். எந்தவொரு வணிகரும் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட்களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையைக் காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களின் நலன்கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவுத் துறை சார்பில் 150 நடமாடும் காய்கறி கடைகளை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் விற்பனையாளர்கள் விற்பனை செய்வார்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து பொதுகழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக்கப்படும். எனவே, பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளைகளும் அகற்றப்பட வேண்டும்." என அரசு அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications