பெண்களை இடிக்கவே பேருந்தில் சென்ற பிக்பாஸ் சரவணன்.. இதுக்கு கைத்தட்டுவதா?.. சின்மயி சீறல்
சென்னை: பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் சென்றதாக பிக்பாஸ் சரவணன் கூறியுள்ளதற்கு பாடகி சின்மயி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக்பாஸ் எனும் நிகழ்ச்சியின் 3-ஆவது சீசன் கடந்த 34 நாட்களாக நடைபெற்று வருகிறது. வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்கள் கமல் ஹாசன் உரையாடுவார். இதில் நாமினேட் செய்யப்படுபவர்களில் யார் காப்பாற்றப்படுவார் என்பதை சனிக்கிழமை அறிவிப்பார்.
அது போல் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதை ஞாயிற்றுக்கிழமைகளில் தெரிவிப்பார். இப்படியாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

தொகுத்து வழங்கிய கமல்
இந்த நிலையில் நேற்றைய தினம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அப்போது இயக்குநர் சேரன் மீது மீரா மிதுன் வீண்பழி சுமர்த்தினார். அதாவது அந்த நிகழ்ச்சியில் டாஸ்கின் போது சேரன் தன்னை தவறாக இடத்தில் கைவைத்ததாக மீரா கூறியிருந்தார்.

கருத்தை ஆமோதித்த சரவணன்
இந்த நிலையில் இதில் யார் சொல்வது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு குறும்படம் ஒளிபரப்பானது. இதையடுத்து மீராமிதுனிடம் கமல் பேசியது போது தெரியாமல் கை பட்டதற்கே இப்படி செய்கிறீர்களே அரசு பேருந்தில் பெண்களை இடிப்பதற்காகவே முண்டியடித்து கொண்டு பயணம் செய்வோர்களும் உண்டு. அப்படியிருக்கும் போது நீங்கள் பஸ்ஸில் எல்லாம் பயணம் செய்ய முடியாது போலயே என கமல் கூறிய கருத்தை சரவணன் ஆமோதித்தார்.

புனிதராகி
இதற்கு கமல், பாருங்கள் சரவணன் கூட இது போன்ற அநியாயத்தை தட்டிக் கேட்டிருக்கிறார் போல் என கூற, அதற்கு சரவணனோ சார் நான் கல்லூரி படிக்கும் பெண்களை இடிப்பதற்காகவே பேருந்தில் பயணம் செய்துள்ளேன் என்றார். இதற்கு நீங்கங்கள் அதையும் தாண்டி புனிதராகிவிட்டீர்கள் என்றார்.
|
வீடியோ
இதை கேட்ட பார்வையாளர்கள் கைதட்டினர். இந்த வீடியோவை பாடகி சின்மயிக்கு சமூகவலைதளத்தில் ஒருவர் அனுப்பியுள்ளார். அந்த வீடியோ குறித்து சின்மயி கூறுகையில் பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார்கள். அதையும் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்களுக்கும் நகைச்சுவையாக உள்ளது. சரவணனுக்காக பெண்களும் ஆடியன்ஸும் கை தட்டுகிறார்கள் என கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications