சசிகலாவுக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரை கொடுத்த அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
சென்னை: சசிகலாவுக்கு அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த கார் கொடுத்த சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி கட்சியில் இருந்து நீக்கபட்டார்.
Recommended Video

சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்த மேலும் 6 பேரையும் கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியுளளது.

சசிகலா வருகிறார்
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவிட்டு பண்ணை வீட்டுக்கு சென்ற போது சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணம் செய்தார். இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்புகளை கிளப்பியது. இந்த நிலையில் அவர் இன்றைய தினம் காலை 7.40 மணிக்கு கோடாகுருக்கி பண்ணை வீட்டிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு வந்துக் கொண்டிருக்கிறார்.

அகற்ற மறுப்பு
அப்போது அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக எல்லையில் அதிமுக கொடியை அகற்ற நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. கொடியை அகற்ற சிறிது நேரம் கால அவகாசம் வழங்கப்படும். ஒரு வேளை அகற்ற மறுத்தால் போலீஸாரே அகற்றுவர் என எச்சரிக்கப்பட்டது.

எஸ்.ஆர். சம்பங்கி
வேறு ஒரு கார் இந்த நிலையில் சசிகலாவின் கார் தமிழக எல்லையான ஜூஜூவாடியை வந்தடைந்தது. அப்போது அவரது காரில் இருந்த அதிமுக கொடி அகற்றப்பட்டது. எனினும் சசிகலாவுக்கு பின்னால் வந்த வாகனங்களில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதனால் சசிகலா அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த வேறு ஒரு காருக்கு மாறினார். அந்த கார் அதிமுக சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி என்பவருக்கு சொந்தமானது.

கட்சியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் அதிமுக கொடி கட்டிய காரை சசிகலாவுக்கு கொடுத்தது சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர். சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கபட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதே போல் சசிகலாவுக்கு வரவேற்பு கொடுத்த மேலும் 6 பேரையும் கட்சியில் இருந்து அதிமுக தலைமை நீக்கியுளளது.












Click it and Unblock the Notifications