கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது.. எஸ்வி சேகர் உருக்கம்!
Recommended Video
சென்னை: நடிகர் மற்றும் எழுத்தாளர் கிரேஸி மோகனின் மறைவு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் இன்று பிற்பகல் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66.
தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட நிலையில் கிரேஸி மோகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது. பிற்பகல் 2 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

திரைத்துறையினர் அதிர்ச்சி
கிரேஸி மோகனின் திடீர் மரணம் திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முகம் சுளிக்காதபடி வசனங்கள்
கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரும் அவருடன் இணைந்து பல நாடகங்களில் பணியாற்றியாவருமான எஸ்வி சேகர், அவர் குறித்து பகிர்ந்து கொண்டது, மக்கள் முகம் சுளிக்காத வகையில் வசனங்களை எழுதியவர். கிரேஸி மோகனின் நாடகங்கள் குழந்தைகளுடன் பார்க்கும் வகையில் இருக்கும்.

எதிரிகளே கிடையாது
நகைச்சுவை நடிகர், வசனகர்த்தாவான கிரேஸி மோகன் சிறந்த ஓவியர். கடவுள் படங்களை தத்ரூபமாக வரையக்கூடியவர். கிரேஸி மோகன் கூட்டுக்குடும்பத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். கிரேஸி மோகனுக்கு எதிரிகளே கிடையாது இவ்வாறு எஸ்வி சேகர் கூறினார்.

அதிக ஜோக்குகள் கூறுவார்
கோபம் வரும்போது அதிகமாக நகைச்சுவைகளை கூறி சிரிக்க வைப்பவர் கிரேஸி மோகன் என நடிகர் சார்லி கூறினார். கிரேஸி மோகன் மறைவு நாடக உலகிற்கும் திரைத்துறைக்கும் பேரிழப்பு என்றும் அவர் கூறினார்.

கறுப்பு நாள்
நடிகர் மோகன் ராம், நாடகத்துறையின் கறுப்பு நாள் இன்று என தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மாபெரும் கலைஞன் கிரேஸி மோகன் இழப்பு நகைச்சுவை உலகிற்கு பேரிழப்பு என நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.

சிரிப்பு மருந்து கொடுத்தவர்
இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவர் கிரேஸி மோகன். நம் இதயத்திற்கு சிரிப்பு மருந்து கொடுத்தவரின் இதயம் இன்று நின்று போய்விட்டது என இயக்குநர் சரண் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications