Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தக்காளியை விடுங்க.. ரூ.450 வரை உயரும் சினிமா டிக்கெட்.. இனி இரண்டு மடங்கு கட்டணம்? போச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.

நாடு முழுக்க தொடர்ந்து பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. பணவீக்கம் காரணமாக தொடர்ந்து விலைவாசி உயர்ந்து வருகிறது. தற்போது இந்தியாவின் பணவீக்கம் 4.25% ஆக உள்ளது.

Cinema ticket price to be increased in Tamil Nadu: Multiplexes asked permission from the Government

இதன் காரணமாக பொருட்களின் விலையும் தொடர்ந்து 4-5 சதவிகிதம் வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மிழ்நாட்டில் தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபரிமிதமாக அதிகரிக்கத் தொடங்கிய தக்காளியின் விலை, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் ₹100ஐ எட்டியது.

ஜூன் 12ம் தேதி கிலோ ₹20 ஆக இருந்தது. அதுவே தற்போது வேகமாக உயர்ந்து ஒரு கிலோவுக்கு ₹100 என்ற விலையில், தக்காளியின் விலை இப்போது சந்தையில் விற்கப்படுகிறது. கலர் பெல் பெப்பர்ஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற வெளிநாட்டு காய்கறிகளை விட தக்காளி விலை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக தற்போது ரேஷன் கடைகளில் கூட தக்காளி விற்கும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இன்று முதல் தமிழ்நாடு முழுக்க ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது. சென்னையில் மட்டும் 90 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்பட உள்ளது.

இந்த விலை ஏற்றத்திற்கு இடையில் தற்போது சினிமா டிக்கெட்டுகள் விலையும் அதிகரிக்க உள்ளது. சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்துள்ளது.

அதன்படி 120 ரூபாயில் இருந்து விற்கப்பட்ட டிக்கெட் தியேட்டரை பொறுத்து அதிகபட்ச கட்டணத்திற்கு உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு ₹250 ஆக கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. AC திரையரங்குகளுக்கு ₹200 ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. Non-AC திரையரங்குகளுக்கு ₹120 ஆகவும் உயர்த்திக் கொள்ள அனுமதி வழங்க கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே தியேட்டர்களில் படம் பார்க்க பார்க்கிங், உள்ளே கேண்டினில் காபி விலை தொடங்கி எல்லாமே மூன்று மடங்கு உள்ளது. இதனால் மக்கள் ஓடிடி பக்கம் செல்லும் நிலையம் அதிகரித்து உள்ளது. தியேட்டர்களுக்கு செல்வதற்கு பதிலாக ஓடிடி பக்கம் செல்ல தொடங்கி உள்ளனர். இந்த நிலையில்தான் தற்போது டிக்கெட் மேலும் உயர்த்தப்பட உள்ளதால் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+