உயிரை பணயம் வைத்து பணி செய்யும் எங்களை நிரந்தரம் செய்யுங்கள்.. தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
சென்னை: எங்கள் நிரந்தரத் தொழிலாளர்களாக்க வேண்டும் என தூய்மை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
Recommended Video
நாட்டை தூய்மையாக வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் தூய்மை பணியாளர்கள்தான். இவர்கள் ஒரு நாள் இல்லாவிட்டாலும் அந்த தெருவே குப்பைக் கூளமாக நாற்றத்துடன் காணப்படும். தூய்மை பணியாளர்கள், சாக்கடையை சுத்தப்படுத்தும் பணியாளர்கள் இல்லாவிட்டால் நாடு என்னவாகும் என்பதை சந்திரமுகி படத்தில் தேவுடா தேவுடா பாடல் மிகவும் அற்புதமாக விளக்கியிருக்கும்.
அதில் "சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாள் லீவு போட்டா நாறி போகும் ஊரு, முடி வெட்டும் தொழில் செய்யும் தொழந்தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு" என பாடல் வரிகள் இருக்கும். அந்த வகையில் தற்போது கொரோனாவால் நாடே முடங்கி இருந்தாலும் சுகாதார பணியாளர்கள், போலீஸார் போல் தூய்மை பணியாளர்களும் தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள்.

உபகரணங்கள்
இவர்களுக்கு நாள்தோறும் ஷிப்ட் அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. இவர்களின் தேவைகள் என்ன, இவர்களுக்கு அரசு செய்துள்ள வசதிகள் சலுகைகள் போதுமானதா, கொரோனா சுத்த பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்வோம்.

கொரோனா
இதுகுறித்து சென்னையில் தூய்மை பணியாளர்களிடம் நமது ஒன் இந்தியா தமிழ் தளம் பேட்டி எடுத்தது. அப்போது அவர்கள் கூறுகையில் அரசு எங்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்துள்ளது. கொரோனாவுக்கு முன்பை விட தற்போது குப்பைகள் குறைந்து காணப்படுகின்றன. எங்களை மாதிரி வேலை பார்க்கும் நபர்களுக்கு கொரோனா நேரத்தில் மட்டும் இல்ல எப்போதும் கிளவுஸ், மாஸ்க், செருப்பு ஆகியவற்றை அரசு வாங்கிக் கொடுக்க வேண்டும்.

தன்னார்வலர்கள்
நாங்கள் பணியாற்றுவதை நீங்கள் பார்க்கிறீர்கள். பொதுமக்கள், தன்னார்வலர்கள் எங்களுக்கு மாஸ்க் இவற்றையெல்லாம் வாங்கித் தருகிறார்கள். ஆனால் எங்களை வைத்து வேலை வாங்கும் அரசாங்கம் இதை செய்ய வேண்டும். இப்போது அரசு வாங்கி கொடுப்பதை போல் எப்போதும் கொடுக்க வேண்டும். முக்கியமாக செருப்பு வாங்கி தர வேண்டும்.

வீடு திரும்பும்போது
நாங்கள் பணி முடித்துவிட்டு வீடு திரும்பும்போது எங்கள் வீடுகளில் வாசலில் ஒரு பக்கெட் தண்ணீர், கை கழுவ சோப்பு வைத்துவிடுவார்கள். அவற்றால் நாங்கள் கை, கால்களை கழுவி கொண்டுதான் உள்ளே செல்வோம். போட்டுக் கொண்டிருக்கும் துணிகளை அப்படியே கழற்றி ஓரமாக வைத்து விட்டு குளிக்க சென்றுவிடுவோம். ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வரும் எங்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும் என்றனர்.

சுத்தமாக
இதுகுறித்து அதிகாரிகள் நமக்கு அளித்த பேட்டியில் சென்னையில் மண்டலம் 7-இல் கொரோனா பாதிப்பு இல்லை. இதற்கு காரணம் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அளித்த பங்களிப்பே ஆகும். தூய்மை பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. சுத்தமாக வேலை செய்ய அவர்களுக்கு சோப்பு வழங்கப்பட்டுள்ளது. கிளவுஸ், முகமூடி கொடுக்கப்பட்டு காலை, மதியம் உணவும் வழங்கப்படுகிறது. அவர்கள் உயிரை பணயம் வைத்து இந்த நாட்டு மக்களுக்காக போராடி வருகிறார்கள் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications