"எடு வண்டியை".. தஞ்சையில் சசிகலா.. மொத்தம் 3 நாள்.. "கவனியுங்கள்".. உளவுத்துறைக்கு போன உத்தரவு!

சசிகலாவின் தஞ்சாவூர் விஜயம் குறித்த செய்திகள் பரபரத்து வருகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலாவின் திடீர் தஞ்சை விஜயம் பல்வேறு அரசியல் களத்தில் ஏற்படுத்தி வருகிறது.. இந்த பயணம் எதற்காக? ஏன்? என்ற கேள்விகளும் வட்டமடித்து கொண்டிருக்கின்றன.

சசிகலாவின் வருகை இந்த முறை தேர்தலில் எதிரொலிக்கும் என்று கணக்கு போடப்பட்டது.. ஆனால், திடீரென அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்தார்.

சென்னையில் இருந்து வந்தவர் எந்த அதிரடியையும் கையில் எடுக்கவில்லை.. அதேபோல, விலகல் அறிவிப்புக்கு பின்னரும் எதுவும் செய்யவில்லை.. எதற்காக இவர் அமைதியாகவே இருக்கிறார்? நிஜமாகவே இவர் அரசியலில் இருந்து ஏன் ஒதுங்கினார் என்ற கேள்விகளும் இன்றும் அடங்கவில்லை.

 நடராஜன்

நடராஜன்

தினகரன் ஒரு பக்கம் பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் சமயம், திடீரென தஞ்சைக்கு பயணமாகி உள்ளார் சசிகலா.. கணவர் நடராஜனின் தம்பி பழனிவேலின் பேரக்குழந்தைகளுக்கு காதணி விழா நடக்கிறது.. அந்த விழா நடராஜனின் விளார் கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலில் நடக்கிறது. இதற்குதான் சசிகலா கிளம்பி சென்றார்.. இன்று நடந்த கிடாவெட்டு பூஜையிலும் கலந்து கொண்டார்..

அஞ்சலி

அஞ்சலி

சசிகலாவிற்கும், நடராஜனுக்கும் கல்யாணமான புதுசில் இந்த கோயிலுக்கு வந்தார்களாம்.. அதோடு இப்போதுதான் 30 வருஷம் கழித்து சசிகலா சென்றதாக கூறப்படுகிறது... மேலும் வரும் 20-ம் தேதி நடராஜனின் 3-ம் வருட நினைவு நாளும் வருகிறது.. அதனால், அந்த சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்துவார் என்று ஏற்கனவே செய்திகளும் கசிந்தபடி வந்ததால், இந்த தகவலும் உண்மை என தெரியவருகிறது. இதை தவிர நெருக்கமான உறவினர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 சந்திப்பு

சந்திப்பு

எனினும் சொந்த காரணங்களுக்காக மட்டும் தஞ்சாவூருக்கு சசிகலா சென்றதாக எடுத்து கொள்ளலாமா என்றால், அதுதான் இல்லை.. இந்த தஞ்சை விஜயத்திலும் அரசியல் இருக்கிறதாம். மொத்தம் 3 நாள் தஞ்சாவூருக்கு பிளான் செய்துள்ளார் சசிகலா.. அரசியல் பிரபலங்கள் சிலரை சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் யார் யார் என்று தெரியவில்லை.

 வேட்பாளர்கள்

வேட்பாளர்கள்

ஒருவேளை தினகரன் வேட்பாளர்களை அறிவித்து விட்ட நிலையில், சமுதாய ஓட்டுக்களை திருப்பிவிடும் மறைமுகமான முயற்சியில் சசிகலா ஈடுபடலாம் அல்லது வேட்பாளர்களில் யாராவது சசிகலாவை சந்தித்து ஆதரவு கேட்கலாம் என்றும் யூகங்கள் வலம்வருகின்றன.

வைத்திலிங்கம்

வைத்திலிங்கம்

இதனிடையே, சசிகலா தஞ்சைக்கு சமயம்தான், அங்கு முதல்வரும் பிரச்சாரம் செய்துள்ளார்.. அப்போது அமைச்சர் விஜயபாஸ்கரிடம் சசிகலா தொடர்பாக பேசியதாக தெரிகிறது.. அதேபோல, வைத்திலிங்கத்துடனும் இதுகுறித்து விவாதித்ததாக கூறுகிறார்கள்.. இதையடுத்து, சசிகலாவை யார் யாரெல்லாம் சந்திக்கிறார்கள் என்று கண்காணியுங்கள் என்று வைத்திலிங்கத்துக்கு எடப்பாடியார், சொன்னாராம்.. வழக்கம்போல உளவுத்துறையும் இது சம்பந்தமான அசைன்மென்ட் தந்துள்ளதாக தெரிகிறது.

 3 நாள்

3 நாள்

அதிமுக தரப்பில் யாராவது சென்று சந்திப்பார்களா? அல்லது ஆதரவு கேட்பார்களா? என்ற கலக்கமும் சூழ்ந்துள்ளது.. ஆக மொத்தம் இந்த 3 நாளில் சசிகலாவின் அரசியல் தஞ்சாவூரில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+