வில்சனை இழந்து தவிக்கும் குடும்பம்.. ரூ. 1 கோடி நிவாரண நிதி.. அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி
வில்சன் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம். முதல்வர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை செக் போஸ்ட்டில் எஸ்ஐ வில்சன் நேற்று முன்தினம் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது உடல் 21 குண்டுகள் முழங்க அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இக்கொடூர கொலை சம்பந்தமாக, எதிரிகளை அடையாளம் கண்டு கைது செய்ய, 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து முதல்வர், நேற்று சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருந்தார். அதில், "களியக்காவிளையில் எஸ்ஐ சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் வழக்கு புலன் விசாரணையில் இருந்து வருகிறது. குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்.
குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மறைந்த காவல் எஸ்ஐ வில்சன் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கு ஏற்றாற்போல், கருணை அடிப்படையிலான அரசு பணி வழங்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக வில்சனை கொன்றவர்கள் குறித்த துப்பு தந்தால் 2 லட்சம் சன்மானம் என்று கன்னியாகுமரி போலீஸார் அறிவித்துள்ளனர். அதேபோல, குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் 2 பேரின் தலைக்கும் தலா ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று கேரள மாநில டிஜிபி லோக்நாத் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications