Breaking Live News: தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு
Recommended Video
தஞ்சை: புயலால் வெகுவாக பாதிக்கப்பட்ட, தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை பார்வையிட்டார். ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை கோடியக்கரைக்கு சென்ற நிர்மலா சீதாராமன், உப்பு உற்பத்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளிக்கு சென்று, புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட்டார். தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்யவுள்ளார்
தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு - பாலச்சந்திரன்
சென்னையில் வானம் மேகமூட்டமாக இருக்கும் - வானிலை மையம்
வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
கடந்த 24 மணி நேரத்தில் திருத்துறைப்பூண்டியில் 10 செமீ மழை பெய்துள்ளது
புயல் அபாயம் இப்போதைக்கு எதுவும் இல்லை - பாலச்சந்திரன்
கேரள நிதி உதவிக்கு கமல்ஹாசன் வரவேற்பு
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!
— Kamal Haasan (@ikamalhaasan) November 28, 2018
திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளார்
ரயில் மூலம் சென்று ஆய்வு செய்கிறார்
20ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சைக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார் முதல்வர்
வான்வழியாக ஆய்வு செய்ததால் சலசலப்பு
முதல் முறையாக புயல் பாதித்த நாகைக்கு முதல்வர் வருகிறார்
பாதிக்கப்பட்ட மக்களோடு அமமுக தோளோடு தோள் நின்று போராடும் - டிடிவி தினகரன்
கஜா புயல் கரையைக் கடந்து பத்து நாட்கள் முடிந்தும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசு அதிகாரிகள் இதுவரை சேத மதிப்பீட்டு பணிகளை துவங்கவில்லை என மக்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர். #CycloneGaja
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 26, 2018
அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும் - டிடிவி தினகரன்
நிவாரணத்திற்கான உத்தரவாதத்தை அரசு மக்களுக்கு தர வேண்டும் - டிடிவி தினகரன்
மக்கள் மிகுந்த கொதிப்பான மனநிலையில் உள்ளனர். மீண்டும் வலியுறுத்த விரும்புவது, அரசு அதிகாரிகள் கிராமம்தோறும் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கான கணக்கீடு பணிகளும், நிவாரணத்திற்கான உத்தரவாதத்தையும் தந்தால் மட்டுமே அவர்களது மனநிலையில் மாற்றம் ஏற்படும். #CycloneGaja
— TTV Dhinakaran (@TTVDhinakaran) November 26, 2018
மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று பொய் சொல்கிறார்கள் - தமிழிசை
மத்திய அரசின் உதவியோடுதான் பணிகளே நடக்கிறது
என்னால் தினமும் அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளிக்க முடியாது - தமிழிசை
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி