தாகத்திலிருந்து தமிழகம் விடுபட.. தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை
சென்னை: குடிநீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தற்போது தொடங்கியது.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்தது. இதனால் கோடை தொடங்குவதற்கு முன்னரே வெயில் கொளுத்தி எடுத்தது.

கோடை காலத்தில் பெய்ய வேண்டிய மழையும் பெய்யாததால் தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக சென்னையில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீருக்காக மக்கள் தவித்து வருகின்றனர்.
டேங்கர் லாரிகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதாக கூறினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம் , நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது. சென்னையில் பல்கி பெருகிவிட்ட ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்திவிட்டனர்.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கல்வி நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்பான புகார்களை முதல்வர் கேட்டறிந்தார். முன்னதாக ரிப்பன் மாளிகையில் அமைச்சர் எஸ்பி வேலுமணி தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் வேலுமணி பேசுகையில் தண்ணீர் பிரச்சினையால் ஹோட்டல்கள் எதுவும் மூடப்படவில்லை. ஹோட்டல்களில் வாழை இலை, பாக்கு மட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
குழுவினர் நேரடியாக ஆய்வு செய்து பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளோம். தண்ணீர் பிரச்சினை உள்ளதாக சம்பந்தப்பட்ட ஐடி நிறுவனத்தினர் கூறினால் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளோம் என்றார் அவர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications