ஸ்டாலினின் “ஸ்டார்” மூவ்.. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை
சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
கடந்த 2021 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு தொகுதிகளுக்கு சென்று மக்கள் சபை கூட்டங்களில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அப்போது மக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என அவர் கூறினார்.

இப்படி மாவட்ட வாரியாக சுமார் 4 லட்சம் கோரிக்கை மனுக்கள் மக்களிடம் இருந்து பெறப்பட்டன. சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு மக்களிடம் பெறப்பட்ட கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையில் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகரை சிறப்பு அதிகாரியாக நியமித்தார்.
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற இந்த திட்டத்தின் கீழ் மக்களின் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவு பிறப்பித்தார். அதன் பேரில் பலரது கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த நிலையில் இன்று உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பெறப்பட்ட மனுக்களின் நிலவரம் குறித்தும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்கிறார்.












Click it and Unblock the Notifications