ஒரே மேடையில் ஸ்டாலின், ரஜினிகாந்த்.. திரண்ட அமைச்சர்கள்.. எவ வேலு புத்தக வெளியீட்டில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் எ.வ.வேலு எழுதியுள்ள ‛கலைஞர் எனும் தாய்’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்த நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை 'கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு. கருணாநிதியுடன் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகிய எ.வ.வேலு, அவருடனான தனது நினைவுகளை இந்த நூலில் அசைபோட்டுள்ளார்.

mk stalin rajinikanth ev velu

கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் இன்று மாலை எ.வ.வேலுவின் 'கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழக அமைச்சர் இந்த நிகழ்வில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நூலை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் முதல் பிரதியை பெற்றுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த் ஆகியோர் விழா மேடையில் அமர்ந்திருந்தனர். அதன்பிறகு, ‛கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.

முன்னதாக விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோர் ஆய்வுரை வழங்கினர். நூலை எழுதிய அமைச்சர் எ.வ.வேலு வேலு ஏற்புரை வழங்கினார். சீதை பதிப்பகத்தைச் சேர்ந்த கவுரா ராஜசேகர் நன்றியுரை ஆற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+