Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சங்கரய்யா உடலுக்கு அரசு மரியாதை- டாக்டர் பட்டம் மறுத்த ஆளுநர் ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த தேச விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய இடதுசாரி இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யா உடல் தமிழ்நாடு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

102 வயது.. இடதுசாரி பெருந்தலைவர் சங்கரய்யா.. முதுமையால் இன்று உடல்நலன் பாதிக்கப்பட்டு காலமானார். தமது இளமை காலத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காக போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றார். இந்திய தேச விடுதலைக்குப் பின்னர் தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக தாம் ஏற்றுக் கொண்ட கம்யூனிச சித்தாந்தத்துக்காக சிறைவாசம் அனுபவித்தார். மக்கள் பிரதிநிதியாக சட்டசபையில் குரல் கொடுத்தார்; மக்கள் உரிமைக்காக 95 வயது வரையிலும் போராட்ட களத்தில் நின்றார். இத்தகைய தீரமிக்க போராளி சங்கரய்யா இன்று காலமானார்.

CM MK Stalin announces Sankaraiahs funeral to be conduct with state honour

சங்கரய்யாவின் இறுதி நாட்களிலும் கூட சித்தாந்த எதிரிகள் அவரை அவமரியாதை செய்தனர். சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்க முடிவு செய்தது. ஆனால் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிற சான்றிதழில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட மறுத்தார். ஆளுநர் ரவியின் சித்தாந்தத்துக்கு எதிரானவர் என்பதால் சங்கரய்யாவுக்கு செய்யப்பட வேண்டிய சிறப்பு மறுக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சங்கரய்யா இன்று காலமானார். இப்போதும் ஆளுநர் ரவி, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் தராமல் அவமதித்தது பேசுபொருளாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இதற்கு பதிலடி தரும் வகையில், சங்கரய்யா உடல் தமிழ்நாடு அரசின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சாதி வர்க்கம் அடக்குமுறை ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிராக வாழ்நாளெல்லாம் போராடிய போராளி சங்கரய்யாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், பொதுவுடைமை இயக்கத் தோழர்கள், பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக, அரசியல் கட்சித் தலைவராக அவர் தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+