7 நாட்களுக்குப் பிறகு வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்! வழக்கமான பணிகளை தொடர்வது எப்போது?
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் 7 நாட்களுக்கு பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். அவர் இன்னும் 3 நாட்கள் வீட்டில் ஓய்வெடுப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21 ஆம் தேதி காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, திடீரென அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை, "முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இதயத்துடிப்பில் ஏற்பட்ட சில வேறுபாடுகள் காரணமாகவே அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதையடுத்து, இரண்டாவது முறையாக அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சையும் செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தது. தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் சிகிச்சையில் இருந்தபடி காணொளி வாயிலாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்தித்து பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு நடத்தி வந்தார். அரசு அலுவல்களை மேற்கொண்டு வந்தார்.
மேலும், திமுக மண்டல பொறுப்பாளர்களைச் சந்தித்து கட்சிப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். நேற்று முன்தினம் தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கோரிக்கைகள் நிரம்பிய மனு ஒன்றையும், அமைச்சர் தங்கம் தென்னரசு வசம் கொடுத்து, அதனை பிரதமர் மோடியிடம் அளிக்கச் செய்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். தொடர்ந்து அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 6 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்றார். அப்போது மருத்துவமனை வளாகத்தின் வெளியேயும், சாலையின் இருபுறமும் திரண்டிருந்த திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் "ஸ்டாலின் வாழ்க.. வாழ்க..." என கோஷம் எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முதலமைச்சர் ஸ்டாலின் பயணித்த காரை அவரது மருமகன் சபரீசன் ஓட்டிச் சென்றார். காரில் வீடு திரும்பும்போது அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் உடன் பயணித்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் வீடு வரை அவரது வாகனம் போக்குவரத்து நெரிசலின்றி செல்லும்படி போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்! உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்!' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னர் அவர் வழக்கமான பணிகளை மேற்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 3 நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஓய்வெடுப்பார், எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
-
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
5 தொகுதிகள் ஒதுக்கும் திமுக.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முடிவு என்ன? 6 மணி நேரமாக நடந்த ஆலோசனை -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
வேல்முருகன் வெளியேற்றம்.. கடலூரில் திமுகவுக்கு இழப்புதான்.. சொல்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து!












Click it and Unblock the Notifications