Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று 14! இன்று 20.. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு.. இலங்கை தமிழர்களின் மனங்களையும் குளிர்வித்த அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த முறை கொரோனா காலத்தில் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை அளித்திருந்தது போல் இந்த 20 தொகுப்புகளும் பொதுமக்களிடையே வரவேற்பை பெறும் என தெரிகிறது.

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்ககளில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்று 7 மாதங்களில் நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளதால் திமுக அரசுக்கு மக்கள் மத்தியில் வரவேற்புள்ளதாக கூறப்படுகிறது. ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா 2ஆவது அலை உச்சத்தில் இருந்தது.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

எனினும் சுகாதாரத் துறை, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவால் கொரோனா 2ஆவது அலை ஓய்ந்துவிட்டது என்றே சொல்லலாம். அது போல் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்ததை அடுத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 4000 கொரோனா நிவாரணத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது.

 14 பொருட்கள்

14 பொருட்கள்

அது போல் 14 மளிகை பொருட்களும் கொரோனா கால நிவாரணமாக வழங்கப்பட்டது. அந்த 14 பொருட்களில்

சர்க்கரை- 500 கிராம்
கோதுமை - 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
டீ தூள் -200கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு 25 கிராம் - 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1


ஆகியவை வழங்கப்பட்டன.

 மக்கள் பாராட்டு

மக்கள் பாராட்டு

இந்த 14 பொருட்களும் தரமானவையாகவே இருந்ததாக பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தார்கள். மேலும் தமிழக அரசின் கொரோனா நிவாரணத் தொகையை பெற்ற ஏழை பாட்டி ஒருவர் முகத்தில் இருந்த சந்தோஷத்தை புகைப்படம் எடுத்த கலைஞருக்கு பாராட்டு தெரிவித்து, ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அது போல் வடகிழக்கு பருவமழையால் சென்னை உள்பட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அவற்றை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்ததும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. அது போல் வெள்ள நிவாரண முகாம்களில் நேரடியாக அவர் ஆய்வு செய்து அங்கு தயார் செய்யப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்ததும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

 ரேஷன் அட்டை

ரேஷன் அட்டை

இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய 20 பொருட்கள் துணிப்பையுடன் வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 2,15,48,060 குடும்பங்களுக்கு ரூ. 1088 கோடி நிதியில் பொங்கல் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் ஏழைகளின் நாடித் துடிப்பை முதல்வர் ஸ்டாலின் புரிந்து வைத்திருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+