2 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி கோயில் சொத்து மீட்பு! இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் ஆட்சி! -ஸ்டாலின்
சென்னை: 2 ஆண்டுகளில் ரூ.5,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது என அவர் கூறியுள்ளார். சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கிய நிலையில், இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று 1000 ஆவது குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் பகிர்ந்துள்ளார். அதன் விவரம் வருமாறு;
''எல்லார்க்கும் எல்லாம்" என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றன. 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்களை இரண்டு ஆண்டு காலத்தில் மீட்டது திமுக அரசு.
இன்றைய நாள், 1000-ஆவது கோயில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோயிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை. இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இதற்குக் காரணமான இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு அவர்களையும் -அதிகாரிகளையும் -அலுவலர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.''












Click it and Unblock the Notifications