பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும்! சிறகு விரித்துப் பறக்க வேண்டும்! ஸ்டாலின் வேண்டுகோள்!
சென்னை: பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும் என்றும் வீடுகளில் முடங்காமல் தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
2000 பேர் அமரக்கூடிய வகையில், ''கலைஞர்'' பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும் என்ற உறுதியையும் அவர் அளித்துள்ளார்.
சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் என்பதை கடந்து முன்னாள் மாணவர் என்ற முறையில் பங்கேற்று பேசினார் ஸ்டாலின். அதன் விவரம் வருமாறு;

அதிகாரிகளிடம் பேசி
பல ஊர்களில் பல அரசு நிகழ்ச்சிக்கு நான் செல்கிறபோது, ஆங்காங்கே சில அறிவிப்புக்களை அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற முறையில் நான் வெளியிடுவது உண்டு. ஆக, நான் நேற்றிரவு, நாளை நான் படித்தக் கல்லூரிக்குச் செல்கிறேன். அங்கே சென்று என்ன அறிவிப்புக்களை வெளியிடலாம் என்று அதிகாரிகளோடு கலந்து பேசி, யோசித்துக் கொண்டிருந்தபோது, சில முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதை இப்போது உங்கள் முன்னால் எடுத்து வைக்க விரும்புகிறேன்.

மாபெரும் அரங்கம்
2000 பேர் அமரக்கூடிய வகையில், நம்முடைய கலைஞர் பெயரால் மாபெரும் அரங்கம் மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டித் தரப்படும்.300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் இங்கே படிக்கிறார்கள். தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து அவர்கள் இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கென்று விடுதி கிடையாது. அவர்களுக்கான விடுதி, மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அமைத்துத் தரப்படும்.

என் கனவு
பள்ளிகள், கல்லூரிகள் என்பவை படிப்பையும், பாடங்களையும் மட்டுமல்லாமல், மாணவ மாணவியருக்கு அறிவாற்றலையும், தனித்திறமையையும் உருவாக்கும் வகையில் இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு. இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் முனைவர் பொன்முடி அவர்கள் எத்தனை பட்டங்கள் வாங்கி இருக்கிறார் தெரியுமா?

பொன்முடி படிப்பு
கலைஞர் கூட அடிக்கடி அவரை சொல்கிறபோது பொன்முடி என்று சொல்ல மாட்டார், அறிவுமுடி என்று தான் கூப்பிடுவார் பாசத்தோடு. அந்த அளவுக்கு ஆற்றலைப் பெற்றவர். எந்த அவையாக இருந்தாலும், எந்தப் பொருளாக இருந்தாலும், அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி. கல்லூரிப் பேராசிரியராக இருந்து, இன்று பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார் என்றால், இதற்குக் காரணம் அவரது கல்வித் திறனும் அறிவாற்றலும்தான்.
Recommended Video

பெண் பிள்ளைகள்
பெண்கள் கல்வி கற்பது என்பது, வேலைக்குப் போவது என்பதோடு மட்டுமல்ல, அதோடு முடிந்து விடுவது இல்லை, பெண்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாக, தைரியத்தை வழங்குவதாக கல்வி அமைகிறது. எனவே, பெண் பிள்ளைகள் நிச்சயமாக படிக்க வேண்டும், பட்டங்களைப் பெற வேண்டும். பட்டம் பெற்ற பெண்கள், தங்களது தகுதிக்கேற்ற வேலைக்குச் செல்ல வேண்டும். பெண்கள் தங்களது அறிவாற்றலை வாழ்நாள் முழுக்கப் பயன்படுத்தக்கூடிய சூழலை தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
-
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
வைத்திலிங்கத்திற்கு தஞ்சை திமுக ஷாக்! ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி ஆதரவாளர்? ஒரத்தநாடு என்னாகும்? -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
நெல்லை முபாரக் எங்கே போட்டி? திமுகவிடம் எஸ்டிபிஐ எதிர்பார்க்கும் தொகுதி எது? பரபரக்கும் தேர்தல் களம் -
சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு! திமுக சரமாரி குற்றச்சாட்டு -
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி..வைத்தியலிங்கத்திற்கு வாய்ப்பு கிடைக்குமா?குறுக்கே வந்த இளைஞர்.. போச்சே -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி!












Click it and Unblock the Notifications