தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பாக்கர் மறைவு: முதல்வர் ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் இரங்கல்!
சென்னை: இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர் உடல்நலன் குறைவால் காலமானார். எஸ்.எம். பாக்கர் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், எஸ்.எம். பாக்கர் மறைவெய்திய செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பினருக்கு ஆழ்ந்த இரங்கல், ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: அகில இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவரான எஸ்.எம். பாக்கர் சிறந்த பேச்சாளர். அனைத்து சமூகங்களுடனும் இஸ்லாமியர்கள் நல்லுறவுடன் வாழ வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர். பழனிபாபாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தவர். மருத்துவர் அய்யா அவர்கள் மீது மதிப்பும் பற்றும் கொண்டிருந்தவர். தைலாபுரம் தோட்டத்திற்கு பல முறை வந்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து உரையாடியவர். பொதுசிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் என்னுடன் கலந்து கொண்டவர். அவரது மறைவு தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
எஸ்.எம். பாக்கர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட இரங்கல் செய்தி: இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அவர்களின் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இசுலாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் தலித்துகள் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை மக்களின் பாதுகாப்புக்காகவும் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாகப் பாடாற்றியவர். 1990-களின் தொடக்க காலத்தில் மதுரை மண்ணில் தலித்துகளுக்கான போராட்டக் களங்களில் எனக்கு அறிமுகமானார். அதுமுதல் இதுநாள் வரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் தோழமை போற்றியவர். தனிப்பட்ட முறையில் என்மீதும் பேரன்பு காட்டியவர். அவருடைய இறுதி நிகழ்வில் என்னால் பங்கேற்க இயலவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள நச்சு சாராய சாவுகளையொட்டி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேற்றும் இன்றும் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலில் சென்னைக்கு செல்ல இயலவில்லை. எனினும் கட்சியின் முன்னணி தோழர்கள் அவருக்கு நேரில் வீரவணக்கம் செலுத்துகின்றனர்.
அவருடைய மறைவு இசுலாமிய சமூகத்திற்கு மட்டுமின்றி விளிம்புநிலை மக்கள் யாவருக்கும் நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய தவ்ஹீத் ஜமாத் இயக்கத் தோழர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த எஸ்.எம். பாக்கர் அவர்களுக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications