Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாட்களில் 3 மெகா சம்பவங்கள்.. அடித்து ஆடும் முதல்வர் ஸ்டாலின்.. திமுக போடும் கணக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 3 நாட்களில் 3 மெகா சம்பவத்தை முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். நேற்று அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய அறிவிப்பு வெளியான நிலையில், இன்று பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதேபோல் மாணவர்களுக்கான லேப்டாப் திட்டம் நாளை தொடங்க உள்ளது. இதனால் தேர்தல் ரேஸில் மற்ற கட்சிகளை விடவும் திமுக முந்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு நெருங்கிட்ட சூழலில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. இந்த தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக நடிகர் விஜய் களத்திற்கு வந்துள்ளதால், வெற்றி மற்றும் தோல்விக்கு இடையிலான வித்தியாசம் மிகவும் குறைந்த அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CM Stalin

இதனால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் களத்தில் தீவிரமாக இயங்கி வருகின்றன. திமுக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு வாரமும் ஒரு திட்டத்தை தொடங்கி வைப்பதோடு, கட்டி முடிக்கப்பட்ட திட்டங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார்.

கோவை செம்மொழி பூங்கா, மதுரை வேலு நாச்சியார் மேம்பாலம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நெல்லை பொருநை அருங்காட்சியகம், சென்னை வொண்டர்லா, வேலூர் டைடல் பார்க், கோவை மற்றும் மதுரை ஹாக்கி மைதானங்கள், கோவை ஜிடி நாயுடு மேம்பாலம் என்று கடந்த சில மாதங்களில் ஸ்டாலின் ஏராளமான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் புத்தாண்டுக்கு பின் ஸ்டாலின் பல்வேறு மெகா அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். நேற்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகால போராட்டத்தை ஸ்டாலின் முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதேபோல் நாளை 10 லட்சம் மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பிப்ரவரி மாத இறுதிக்குள் 10 லட்சம் மாணவர்களுக்கும் இலவச லேப்டாப்களை கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் எதிர்பார்த்த பொங்கல் பரிசுத்தொகை அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரிசு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரொக்கமாக ரூ.3 ஆயிரம் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பாக கருதப்பட்ட சூழலில், இன்று அறிவித்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஆனால் ஸ்டாலினின் இந்த அறிவிப்புகள் நிற்கப் போவதில்லை என்று பார்க்கப்படுகிறது. தேர்தல் நெருங்குவதற்கு முன்பாக இன்னும் சில சர்ப்ரைஸ்களை ஸ்டாலின் அளிக்க திட்டமிட்டுள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். பொங்கல் பண்டிகை முடிவடைந்த பின் அவை ஒவ்வொன்றாக செயல்படுத்தப்படலாம் என்று பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+