கொளுத்தி எடுக்கும் கோடை.. 22 மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம்.. ரூ 150 கோடி ஒதுக்கிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தில் கோடை காலத்தில் குடிநீர் விநியோகம் செய்ய ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியது. இதனால் பெங்களூரில் பிழைப்புக்காக சென்றவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் நிலை ஏற்பட்டது. இயற்கை உபாதைகளை கழிக்கக் கூட பக்கத்தில் உள்ள மால்களுக்கு செல்லும் நிலை இருந்தது.

இதனால் தோட்டங்களுக்கு தண்ணீர் விட்டு வீணடிக்கக் கூடாது என்றும் வாகனங்களை தண்ணீர் விட்டு கழுவக் கூடாது என்றும் கர்நாடகாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
அந்த வகையில் சென்னையிலும் கோடையில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரிகளில் முழு கொள்ளளவில் கடந்த வார நிலவரப்படி 57 சதவீதம் மட்டுமே நீர் இருந்தது. பூண்டி, சோழவரம், புழல், தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.2 டிஎம்சியாக இருந்தது.
தற்போது வீராணம் ஏரி வற்றிவிட்டது. தமிழகத்தில் கடலூர், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் வெயில் அதிகமாகவே வாட்டி எடுக்கிறது. இதனால் தண்ணீர் பஞ்சத்தை போக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அந்த கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 22 மாவட்டங்களில் குடிநீர் விநியோகத்திற்கு ரூ 150 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பற்றாக்குறை மாவட்டங்களில குடிநீர் விநியோகத்திற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி பாதித்த மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யவும் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் தடையின்றி செயல்பட சீரான மின்விநியோகம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications