காலையிலேயே.. டிராக், டி-ஷர்ட்டோடு களத்தில் இறங்கிய ஸ்டாலின்.. அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு
சென்னை: சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்துள்ளார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழையையொட்டி அடையாறு முகத்துவார பகுதியில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே தொடங்கும் அடையாறு ஆறு 42.5 கிலோ மீட்டர் பயணித்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் பல்வேறு ஏரிகளின் உபரி நீர் மட்டுமின்றி சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளின் இருந்து கழிவுநீரும் கலந்து வருகிறது.

அடையாறு ஆற்றை சீரமைப்பதற்கான பணிகள் சென்னை வெள்ள தடுப்பு அறக்கட்டளை வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு ஆறு, முகத்துவார பகுதி மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை சீனிவாசபுரம் அருகே அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆய்வு செய்தார். முகத்துவாரத்தை அகலப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications