10 ஃப்ளோர்.. அதிநவீன வசதிகள்.. சென்னையில் உருவாகும் பிரமாண்ட ஹாஸ்டல்.. அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்!
சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி.ராஜா கல்லூரியில் மாணவர் விடுதி கட்டடத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சுமார் ரூ.44.5 கோடியில் 1.01 லட்சம் சதுர அடி பரப்பில், 10 தளங்களுடன் நவீன வசதிகளுடன் இந்த விடுதி அமைக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் "சென்னை எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் நவீன வசதிகளுடன் கூடிய மாணவர் விடுதி ரூ.40 கோடி செலவில் கட்டப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்தார்.

இதனை செயல்படுத்தும் விதமாக, சென்னை எம்.சி.ராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் தற்போது காலியாக உள்ள இடத்தில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் சுமார் 1,01,101 சதுர அடி பரப்பளவில் 10 தளங்கள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டடம் கட்ட அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, மாணவர் விடுதி அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ வேலு, பொன்முடி, கயல்விழி செல்வராஜ், மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications