மதுரை மீனாட்சி கோவிலில் தங்கும் விடுதி..அழகர் கோவிலில் விருந்து மண்டபம்.. தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை: மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர் கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம் உள்ளிட்ட ரூ.105 கோடி மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 18 திருக்கோயில்களில் திருமண மண்டபங்கள், திருக்குளப் பணிகள், பக்தர்கள் தங்கும் விடுதி, விருந்து மண்டபம் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, அன்னதானக் கூடம், முடிகாணிக்கை மண்டபம், காதுகுத்தும் மண்டபம், வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
திருக்கோயில் பள்ளி, கல்லூரி கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், கலையரங்கம், புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், மண்டல இணை ஆணையர் அலுவலகம், ஓதுவார் பயிற்சிப் பள்ளி போன்ற புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்காக திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு, 250 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், திருக்கோயில்களில் திருப்பணிகள் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளையும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.

மீனாட்சி அம்மன் கோவில்
அந்த வகையில், மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி சுந்ததேஸ்வரர் திருக்கோயிலில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டும் பணி, மதுரை மாவட்டம், அழகர் கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் விருந்து மண்டபம், காதுகுத்தும் மண்டபம் மற்றும் முடிக்காணிக்கை மண்டபம் கட்டும் பணிகள்; மதுரை மாவட்டம், வேங்கடசமுத்திரம், அருள்மிகு காட்டுப் பத்திரகாளியம்மன் திருக்கோயிலில் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணிகளை தொடங்கி வைத்தார்.

வடபழனி ஆண்டவர் கோவில்
சென்னை , அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் ரூ.9.84 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், முடி காணிக்கை மண்டபம் மற்றும் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிகள்; சென்னை , அருள்மிகு ஏகாம்பரேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.54 கோடி மதிப்பீட்டில் தென்காசி மாவட்டம், குற்றாலம், அருள்மிகு பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.1 கோடியே 87 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் நடைபாதை தளம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நெல்லையப்பர் கோவில்
திருநெல்வேலி மாவட்டம், அருள்மிகு நெல்லையப்பர் அருள் தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலில் ரூ.1 கோடியே 51 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் ஓதுவார் பயிற்சிப் பள்ளிக் கட்டடம் கட்டும் பணிகள்; என மொத்தம் ரூ.105 கோடி மதிப்பீட்டிலான திருக்கோயில்களின் புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
-
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ!












Click it and Unblock the Notifications