ஹே என்னப்பா.. ரிமோட் கைவிலங்கு, AI சாட்பாட், கிரிப்டோ கருவி.. முதல்வர் வெளியிட்ட ஹைடெக் அறிவிப்புகள்
சென்னை : குற்றவாளிகளை கைது செய்யும்போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் வாங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது காவல்துறைக்கான பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள், க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்கும் கருவிகள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஹை-டெக் : குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் 25, ரூ.75.07 லட்சம் செலவில் வாங்கப்படும்.
க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் AI-ஐ அடிப்படையாக கொண்டு ChatBot, VoiceBot, Video Chat ஆகியவையுடன் கணினி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
புதிய அறிவிப்புகள் : சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.
விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுகா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
சீருடைப்படி உயர்வு : தாம்பரம் மாநகருக்கு உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.
ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்.
காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications