ஹே என்னப்பா.. ரிமோட் கைவிலங்கு, AI சாட்பாட், கிரிப்டோ கருவி.. முதல்வர் வெளியிட்ட ஹைடெக் அறிவிப்புகள்
சென்னை : குற்றவாளிகளை கைது செய்யும்போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் வாங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளை காவல்துறை மானியக் கோரிக்கையில் வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று முதல் காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து 101 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது காவல்துறைக்கான பல்வேறு ஹை-டெக் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின். ரிமோட் மூலம் கைவிலங்கிடும் கருவிகள், க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்கும் கருவிகள் வாங்கப்படும் என அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
ஹை-டெக் : குற்றவாளிகளை கைது செய்யும் போது பலத்தை பிரயோகிக்காமல் பாதுகாப்பாகவும் சட்ட ரீதியாகவும் அவர்களை கட்டுப்படுத்த ரிமோட் மூலம் விலங்கிடும் Remote Restraint Wrap கருவிகள் 25, ரூ.75.07 லட்சம் செலவில் வாங்கப்படும்.
க்ரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க செயின் பகுப்பாய்வு ரியாக்டர் (Chain Analysis Reactor Tool) கருவி வாங்கப்படும். க்ரிப்டோ கரன்சியின் மூலத்தையும், சேரும் இடத்தையும் கண்டுபிடிக்க இக்கருவி பயன்படும்.
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் AI-ஐ அடிப்படையாக கொண்டு ChatBot, VoiceBot, Video Chat ஆகியவையுடன் கணினி இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளது.
புதிய அறிவிப்புகள் : சென்னையில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும்.
நெல்லை வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் ரூ. 10.15 கோடி மதிப்பில் புதிதாக மரபணு ஆய்வுப்பிரிவு உருவாக்கப்படும்.
விழுப்புரம் மேல்மலையனூர், உள்ளிட்ட 5 இடங்களில் புதிய தாலுகா காவல்நிலையங்கள் அமைக்கப்படும்.
காஞ்சிபுரம், திருச்சி, நெல்லை உட்பட 4 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.
சீருடைப்படி உயர்வு : தாம்பரம் மாநகருக்கு உட்பட்ட பெரும்பாக்கம், ஓட்டேரி உள்ளிட்ட காவல்நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.
பெண் காவலர்களுக்காக சென்னை சிந்தாதிரிபேட்டையில் மகளிர் காவல் விடுதி கட்டப்படும்.
ஆண்டுதோறும் காவலர்களுக்கு சீருடைப்படி ரூ.4,500 வழங்கப்படும்.
காவலர் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ரூ.30,000 ஆக உயர்த்தப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
-
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
செல்வப்பெருந்தகை திமுகவில் இணைகிறாரா? அந்த 1 முக்கிய லாபம்.. அதிர்ச்சியில் காங்கிரஸ் -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
என்னோட பேவரிட் தோனியை மிஸ் பண்ற பீலிங்கை அவாய்ட் பண்ண முடியல.. ஸ்டாலின் -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
திருத்தணி தலைமை காவலரின் மனைவி பாக்கியலட்சுமிக்கு தலைவலி.. பிரபல மருத்துவமனையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications