மோடி பேச்சை ரசித்தேன்.. சிரித்தேன்.. முதல்வர் ஸ்டாலின் பேசப் பேச.. அடக்க முடியாமல் சிரித்த பொன்முடி!
சென்னை: பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை திரும்பினார். தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக கடந்த 27ஆம் தேதி ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட் சென்றார். ஸ்பெயினில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

பிரபலமான ஹபக் லாய்டு நிறுவனத்துடன் ரூ.2,400 கோடி முதலீட்டுக்கு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் உறுதி அளித்தது. ஆக்சியானா, அம்போ வால்வ்ஸ் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகளுடன் முதலமைச்சர், ஸ்பெயினில் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, பல்வேறு முன்னணி தொழில் நிறுவன பிரமுகர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார் ஸ்டாலின். தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஸ்பெயின் சுற்றுப்பயணத்தில் ரூ.3,400 கோடி அளவில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்நிலையில், இன்று ஸ்பெயினில் இருந்து தமிழ்நாடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளாரே, அது தொடர்பான நிகழ்வுகளை நீங்கள் பார்த்தீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "பிரதமர் மோடியின் நாடாளுமன்ற உரையை பார்த்தேன், படித்தேன், ரசித்தேன், சிரித்தேன். ஏனென்றால் பாஜக எதிர்க்கட்சி போலவும், காங்கிரஸ் ஆளுங்கட்சி போலவும் தொடர்ந்து பேசி வருகிறார் மோடி. ஆளுங்கட்சியாக வந்தது முதல், அவர் எதிர்க்கட்சி ஆக காங்கிரஸ் கட்சியை அட்டாக் செய்வது போல பேசி வருகிறார். இதுதான் புரியாத புதிராக உள்ளது" என்றார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில், 400 இடங்களை கைப்பற்றுவோம் என பிரதமர் மோடி பேசியுள்ளது பற்றிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், "மொத்தம் 400 தானா? மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. மோடி 543 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் எனச் சொன்னாலும் ஆச்சர்யமில்லை." எனத் தெரிவித்தார். முதல்வரின் கமெண்ட்டால் அவருக்கு பின்னால் நின்றிருந்த பொன்முடி உள்ளிட்டோர் அடக்க முடியாமல் சிரித்தனர்.
-
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி!












Click it and Unblock the Notifications