Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியாவின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.10 லட்சம், வீடு-அரசு வேலை ஆணை வழங்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கால் அகற்றப்பட்ட 17 வயது நிரம்பிய கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியா உயிரிழந்த நிலையில் அவரது வீட்டுக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரவிக்குமாரின் மகள் பிரியா (வயது 17). இவர் ஏழை குடும்பத்தை சேர்ந்த பிரியா தனியார் கல்லூரியில் படித்தபடியே கால்பந்து விளையாட்டில் ஆர்வமாக இருந்தார்.

மேலும் கால்பந்து விளையாடுவதில் அவர் சிறந்து விளங்கினார். இந்நிலையில் தான் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கேற்று வந்தார். சமீபத்தில் அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டது.

மாணவி மரணம்

மாணவி மரணம்

இதையடுத்து சென்னை பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் வலது கால் மூட்டுப் பகுதியில் ஜவ்வு விலகியது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இறுக்கமாக கட்டு போடப்பட்டது. இதனால் ரத்தம் ஓட்டம் தடைப்பட்ட நிலையில் பிரியாவின் கால் வீக்கமடைந்து வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கால் அகற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிரியா உயிரிழந்தார்.

பெரும் சோகம்

பெரும் சோகம்

பிரியா மீண்டும் உடல்நலம் தேறி கால்பந்து விளையாடுவார் என அவரது குடும்பத்தினர்கள், தோழிகள் நினைத்திருந்த நிலையில் அவர் உயிரிழந்தார். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றிய விசாரணைக்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை முறையே பிரியாவின் உயிரிழப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியதால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பிரியாவுக்கு சிகிச்சை அளித்த 2 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தற்போது இந்த சம்பவம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

தமிழக அரசு உதவி

தமிழக அரசு உதவி

இந்நிலையில் தான் இறந்த மாணவி பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார். அதோடு தற்போது பிரியாவின் குடும்பத்தினர் உறவினர் வீட்டில் வசித்து வரும் நிலையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக வீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்

இந்நிலையில் தான் இன்று காலை முதல்வர் ஸ்டாலின் பிரியாவின் குடும்பத்தினரை சந்தித்தார். சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரியாவின் வீட்டுக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர் மா சுப்பிரமணியன், அதிகாரிகள் உடன் சென்றனர்.

நிவாரண உதவிகள்

நிவாரண உதவிகள்

இந்த வேளையில் பிரியாவின் குடும்பத்தின் நிலை பற்றி முதல்வர் ஸ்டாலின் கனிவுடன் கேட்டார். மேலும் பிரியா பெற்ற பதக்கங்கள், கோப்பைகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். இதையடுத்து இழப்பீடாக ரூ.10 லட்சம் நிதி, அரசு சார்பில் வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த வேளையில் பிரியாவின் பிரச்சனை பற்றியும், அவர் பங்கேற்ற போட்டிகள் பற்றியும் குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலினிடம் கூறினார். அதோடு அரசு செய்த உதவிகளுக்கு பிரியாவின் பெற்றோர், சகோதரர்கள் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+