அந்தரங்க உறுப்பு எதுக்கு? தாம்பத்தியத்திற்கு மறுத்த மனைவியால் இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் கணவன் - மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. சண்டையின் ஒரு பகுதியாக இரவில் தாம்பத்தியத்துக்கு மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் அருகே உள்ள கோவிலுக்கு சென்று அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.

பீகார் மாநிலத்தின் சாசாரம் மாவட்டம் குஷிரா கிராமத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர் திருமணம் ஆனவர். மனைவியுடன் வசித்து வருகிறார். திருமணமான புதிதில் கணவன் - மனைவி இடையே காதல் நிரம்பி வழிந்தது.

bihar news

அதன்பிறகு அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது பிரச்சனை வந்துள்ளது. அதன்பிறகு சிறிது நேரத்தில் இருவரும் பேசி பிரச்சனையை முடித்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. குடும்ப விஷயம் தொடர்பாக தாம்பத்திய உறவு வைத்து கொள்வதிலும் இருவருக்கும் இடையே தகராறு நடந்து வந்தது. சண்டையின் ஒரு பகுதியாக அந்த பெண், தாம்பத்திய உறவுக்கு மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இளைஞர் நொந்துபோய் உள்ளார். சம்பவத்தன்றும் இரவு 10 மணியளவில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை வெடித்தது. கணவன் தாம்பத்திய உறவுக்கு ஆசைப்பட்ட நிலையில் அவரது மனைவி மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வளவு சொல்லியும் மனைவி கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற இளைஞர் கூர்மையான கத்தியை எடுத்து கொண்டு அருகே உள்ள சிவன் கோவிலுக்கு சென்றார். சிவன் கோவில் வளாகத்தில் நின்ற இளைஞர் திடீரென்று தனது அந்தரங்க உறுப்பை வெட்டி கொண்டார். அதுமட்டுமின்றி கழுத்து உள்பட பிற இடங்களிலும் கத்தியால் வெட்டி தற்கொலைக்கு முயன்றார்.

இதனால் உடலில் இருந்து ரத்தம் அதிகமாக வெளியேறிய நிலையில் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் இளைஞரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக வாரணாசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக தான் உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதுபுற்றி டாக்டர் மணிராஜ் ராஜண்ணா கூறுகையில், ''இளைஞரின் அந்தரங்க உறுப்பு மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற துயர செயல்களை யாரும் செய்யக்கூடாது'' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசில் இன்னும் புகார் அளிக்கப்படவில்லை. இதனால் போலீசார் இன்னும் விசாரணையை தொடங்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+