பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் அசத்தலாக வந்த முதல்வர் ஸ்டாலின்
சென்னை: பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்துடன் முதல்வர் ஸ்டாலின் செஸ் ஒலிம்பியாட் சொடக்க விழாவுக்கு வந்துள்ளார்.
Recommended Video
சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி நேரு விளையாட்டரங்கில் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மாமல்லபுரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து வீரர், வீராங்கனைகளை உற்சாகமாக வரவேற்றனர்.
நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் கல்லணை மற்றும் மாமல்லபுரம் கோயில்கள் குறித்த முப்பரிமான காட்சிகள் ஓளிபரப்பப்பட்டன.

ரஜினிகாந்த் வருகை
இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, நடிகர் கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். அது போல் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மகனும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

செஸ் காயின்
விழா மேடையில் செஸ் காயின்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. விழா மேடையில் 3 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. பிரதமர், முதல்வர், செஸ் ஒலிம்பியாட் சேர்மேன் ஆகியோருக்கு அந்த இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி வானிலை மாற்றம் தொடர்பாக தாமதமாக குஜராத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

பட்டு வேட்டியில் முதல்வர்
அவர் சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் சென்னை நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தருவார். இந்த நிலையில் விழாவுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டை அங்கவஸ்திரத்தில் வந்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ்
இந்த விழாவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வருகை தந்துள்ளார். நிகழ்ச்சியில் தேசியகொடிகளை ஏந்தி அந்தந்த நாட்டினர்களின் அணிவகுப்புகள் நடைபெறுகின்றன. பேக்கிரவுண்டில் ஒருவன் ஒருவன் முதலாளி படத்தின் பாடல் இசை இசைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications