Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கவனிச்சீங்களா! "அதிமுக ஒருங்கிணைப்பாளர்" ஓபிஎஸ்.. கொரோனா வாழ்த்தில் அழுத்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள ஓ.பன்னீர்செல்வம் நலம்பெற வாழ்த்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Recommended Video

    எப்படி இருக்கிறார் OPS? மருத்துவமனை வெளியிட்ட புதிய தகவல்

    எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் ஒற்றைத் தலைமை மோதல் விவகாரம் பூதாகரம் எடுத்துள்ளது. ஓ.பி.எஸ். தரப்பின் தொடர் முட்டுக்கட்டைகள், வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

    ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

    ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

    ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்

    அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சிறப்பு தீர்மானம் போட்டு நீக்கப்பட்டனர்.

    18 பேர் நீக்கம்

    18 பேர் நீக்கம்

    இதனை தொடர்ந்து கட்சியிலிருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேரை நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. ஓ.பி.எஸ். மகன்கள் ரவீந்திரநாத் எம்.பி, ஜெயபிரதீப், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.என்.பி.வெங்கட்ராமன், ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ஓம் சக்தி சேகர், கோவை செல்வராஜ், முன்னாள் எம்.பிக்கள் கோபாலகிருஷ்ணன், சையதுகான் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர்.

    ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

    ஓ.பன்னீர்செல்வம் பதிலடி

    இதற்கு பதிலடி தரும் விதமாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 22 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். செங்கோட்டையன், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோரை முதல் கட்டமாக நீக்கிய ஓ.பன்னீர்செல்வம் நேற்று மேலும் 44 பேரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார்.

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    பொதுக்குழுவில் தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது, எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது என அனைத்து முடிவுகளையும் ஏற்கக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்து இருக்கிறார். இப்படி அடுத்தடுத்த நகர்வுகளை ஒ.பன்னீர்செல்வம் எடுத்து வந்த நிலையில், நேற்று அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    முதலமைச்சர் வாழ்த்து

    முதலமைச்சர் வாழ்த்து

    இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் நலம்பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று முதலமைச்சர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+