விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து
விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, பெண்களின் பாதுகாப்பிற்காக அறிவிக்கப்பட்ட 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' (Singappennae Special Task Force) தொடக்க விழா சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பெண்களுக்கான பாதுகாப்புப் படைத் திட்டம் தொடங்கப்பட்டது ஒருபுறம் என்றால், மறுபுறம் தமிழக முதலமைச்சர் விஜய் எடுத்த ஒரு முக்கிய முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

பதவியேற்பு விழா சர்ச்சை
கடந்த மே மாதம் தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற போது, அதற்கான விழா ஏற்பாடுகளை ஆளுநர் மாளிகையின் (Raj Bhavan) வழிகாட்டுதலின்படியே அதிகாரிகள் செய்திருந்தனர். அப்போது, தமிழ்நாட்டின் நீண்டகால அரசு மரபுகளை முற்றிலும் தலைகீழாக மாற்றி, விழாவின் துவக்கத்தில் முதலாவதாக 'வந்தே மாதரம்' பாடலும், இரண்டாவதாக 'தேசிய கீதமும்' பாடப்பட்டு, 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகவே பாடப்பட்டது.
தமிழ்நாட்டில் எந்தவொரு மாநில அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் அங்கு தமிழ்த்தாய் வாழ்த்து முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதுதான் காலங்காலமாகப் பின்பற்றப்படும் மரபாகும். ஆனால், ஆளுநர் மாளிகை காட்டிய இந்த புதிய நடைமுறை பெரும் அரசியல் சர்ச்சையாக வெடித்ததுடன், தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமர் மோடி சந்திப்பு
பதவியேற்பு விழாவில் நேர்ந்த இந்தச் சர்ச்சை குறித்துப் முதலமைச்சர் விஜய் கடந்த மாதம் மே 27 அன்று டெல்லியில் உள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 முதல் 25 நிமிடங்கள் வரை நீடித்த இந்த மிக முக்கியச் சந்திப்பில், தமிழக நலன் சார்ந்த பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
அதில் மிக முக்கியமாகவும், முதல் கோரிக்கையாகவும், ஆளுநர் மாளிகை நடைமுறைகள் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை காரணமாகத் தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' மூன்றாவதாகப் பாடப்பட்டது குறித்துத் தனது குற்றச்சாட்டியும், அதை சரி செய்ய கோரியும் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
முதல் நிகழ்ச்சி.. முதல் பாடல்..
மாநிலத்தின் கலாச்சார மரபுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்ற விஜயின் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தற்போது முதலாவது அரசு விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து முதல் பாடலாகப் பாடப்பட்டு முறைப்படி நிகழ்வு தொடங்கி வைக்கப்பட்டது.
ராஜரத்தினம் மைதானத்தில் சம்பவம்:
சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படை துவக்க விழாவில், விழாவிற்கு வருகை தந்த விஜய், புதிய சிங்கப்பெண் அதிரடிப்படையினரின் கம்பீரமான மற்றும் சிறப்பான அணிவகுப்பு மரியாதையை (Guard of Honour) ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கான பிரத்யேக லோகோவை (Logo) வெளியிட்டார்.
பெண்களின் அவசரக் காலப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்பட உள்ள அதிநவீன சிறப்பு ரோந்து வாகனங்களை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததுடன் நின்றுவிடாமல், அந்த ரோந்து வாகனத்தை அவரே நேரில் ஓட்டிப் பார்த்து (Test Drive) அதன் செயல்பாடுகளைத் ஆய்வு செய்தார்.
-
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
சென்னை ஆன்லைன் கட்டிட அனுமதியில் அதிரடி மாற்றம்.. ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு பறந்த மெசேஜ்! -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு -
மின் தடை பரிதாபங்கள்.. சென்னைல மட்டும் தங்கத்தில் பியூஸ் கேரியர் இருக்குமோ.. தெறிக்கும் மீம்ஸ்! -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
கட்சி நிகழ்ச்சியா? அரசு ஆய்வுக் கூட்டமா? அமைச்சருக்கு இணையாக அதிகாரிகளுடன் அமர்ந்த தவெக நிர்வாகி! -
கிடைக்கிற கேப்பில் எல்லாம்.. அடிச்சு தூக்கிய விஜய்.. வடக்கின் அஸ்திவாரத்தையே ஆட்ட போகும் பிளான் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா?












Click it and Unblock the Notifications