சென்னைக்கு அக்டோபர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது.. கோடைவெயிலுக்கு நடுவே குட்நியூஸ் கூறிய CMWSSB
சென்னை: கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் கூட சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு என்பது வராது என சென்னை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மேலும் வழக்கத்தை விட மார்ச் மாதம் முதலே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் தற்போது பல இடங்களில் வெப்பஅலை என்பது வீசி வருகிறது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் வெயில் என்பது அதிகரித்துள்ளது. ஏரிகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.
இதனால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல்கள் பரவின. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டது. இதனால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகியவை உள்ளன.
இங்கிருந்து எடுத்து வரப்படும் நீர் 5 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 111 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் அக்டோபர் மாதம் வரை தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக் குடிநீர் வழங்கும் ரேிகளின் தற்போதைய நீர் இருப்பை கணக்கிட்டு இந்த அறிவிப்பு என்பது வெளியிப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications