சென்னைக்கு அக்டோபர் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது.. கோடைவெயிலுக்கு நடுவே குட்நியூஸ் கூறிய CMWSSB
சென்னை: கோடை வெயில் கொளுத்தி எடுத்தாலும் கூட சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு என்பது வராது என சென்னை மாநகர குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. மேலும் வழக்கத்தை விட மார்ச் மாதம் முதலே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மேலும் தற்போது பல இடங்களில் வெப்பஅலை என்பது வீசி வருகிறது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சென்னையும் விதிவிலக்கல்ல. சென்னையிலும் வெயில் என்பது அதிகரித்துள்ளது. ஏரிகளில் தண்ணீர் வேகமாக வற்றி வருகிறது.
இதனால் சென்னையில் இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற தகவல்கள் பரவின. மேலும் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது தற்போது சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு சரிந்துள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டது. இதனால் சென்னை மக்கள் அச்சமடைந்தனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னைக்கு வரும் அக்டோபர் மாதம் வரை குடிநீர் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக கீழ்ப்பாக்கம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம், சூரப்பட்டு ஆகியவை உள்ளன.
இங்கிருந்து எடுத்து வரப்படும் நீர் 5 சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் 111 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதைய சூழலில் சென்னையில் அக்டோபர் மாதம் வரை தங்கு தடையின்றி குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக் குடிநீர் வழங்கும் ரேிகளின் தற்போதைய நீர் இருப்பை கணக்கிட்டு இந்த அறிவிப்பு என்பது வெளியிப்பட்டுள்ளது. இதனால் சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications