“நோ டென்சன்”.. வெள்ளை லிஸ்டுதான்! தென்னை உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த ஆலோசனைக் கூட்டம்தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாட்டித்தில் கோவை, ஈரோடு, நாமக்கல். கரூர், திண்டுக்கல். கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தேனி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தென்னை நார் உற்பத்தி ஆலைகள் அதிக அளவில் உள்ளன. முன்னதாக, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தொழிற்சாலைகளின் வகைப்பாட்டின்படி, தென்னை மட்டையில் இருந்து பொருட்கள் தயாரிப்பது "வெள்ளை" பிரிவின் கீழ் வருவதால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் ஒப்புதலைப் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக அமைச்சர் கடந்த 2021 செப்டம்பரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுடன் தென்னை நார் அலகுகளை மறு வகைப்படுத்துவது தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார். தென்னை நார் தொழிலை உற்பத்தி செயல்முறைகளின் அடிப்படையில் வகைப்படுத்துமாறு பல்வேறு தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர்.
இதற்கிடையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தென்னை நார் தொழிலை கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறைக்காக வகைப்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு உத்தரவிட்டது. தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழு தென்னை நார் தொழிற்சாலைகளுக்கான மாசுக் குறியீட்டு மதிப்பெண்ணை வகுத்தது.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் 'தென்னை நார் உடைத்தல்/டி-ஃபைபர் /பித் பதப்படுத்துதல் தொழில்' ஆகியவற்றை ஆரஞ்சு வகையின் கீழ் வகைப்படுத்தியது. தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கம் தென்னை நார் தொழிற்சாலைகளை மறுவகைப்படுத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில், தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளை வெள்ளை வகையில் தொடருமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தற்போது தென்னை நார் தொழிற்சாலைகள் வெள்ளை நிற வகைப்பாட்டில் தொடர்கிறது. தற்போது, மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியம் ஜூலை 2023-ல் தொழில்துறைகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் வெள்ளை வகைகளாக வகைப்படுத்துவது தொடர்பான வரைவு அறிவிப்பை வெளியிட்டது.
இதில் தென்னை நார் உற்பத்தி (ஈரமான / சாயம் பூசும் செயல்முறை) ஆரஞ்சு பிரிவின் கீழும், தென்னை நார் உற்பத்தி (உலர் செயல்முறை) பச்சை பிரிவின் கீழும், தென்னை நார் பொருட்கள் உற்பத்தி வெள்ளை பிரிவின் கீழும் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமையில் நேற்று நாமக்கல் கவிஞர் மாளிகையில் தென்னை நார் தொழில்களை வகைப்படுத்துதல் குறித்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா ஸாஹூ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவர் ஜெயந்தி, தென்னை நார் தொழில் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தென்னை நார் தொழிற்சாலைகளின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு அவைகளுக்கு தீர்வுகாண அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் தற்போதைய நிலையில் இத்தொழிற்சாலைகள் வெள்ளை வகைப்பாட்டில் தான் தொடர்கிறது என தெளிவுபடுத்தப்பட்டது. மேலும் ஜூலை 2023 ல் வெளியிடப்பட்ட மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் வரைவு வகைப்பாடு அறிவிக்கையின் மீது அனைத்து சங்கங்களும் ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் முறையீடு செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications