கோவை - பெங்களூர் வந்தே பாரத் ரயில்.. எங்கெல்லாம் நின்று செல்லும்? கட்டணம் எவ்வளவு? முழு விவரம்
சென்னை: கோவை - பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் எந்த ஸ்டேஷனில் எல்லாம் நின்று செல்லும். பயணக் கட்டணம் எவ்வளவு? உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து நெல்லைக்கும், சென்னையில் இருந்து கோவைக்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது போக சென்னை டூ பெங்களூர் வழியாக மைசூருக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவைக்கும் இந்தியாவின் ஐடி தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூருக்கும் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

இரண்டு முக்கியமான நகரங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இந்த ரயிலை காணொலி வாயிலாக இன்று தொடங்கி வைக்கிறார். கோவை- பெங்களூர் வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை எட்டு பெட்டிகள் கொண்டதாக இருக்கும்.
ரயில் புறப்படும் நேரம்: கோவை ரயில் நிலையத்தில் இருந்து தினமும் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக காலை 11:30 மணி அளவில் பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக பிற்பகல் 1:40 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு இரவு 8 மணி அளவில் கோவை திரும்பும்.
கோவை - பெங்களூரு இடையிலான 380 கிலோமீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. வந்தே பாரத் ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1000ம், எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1850 ஆகவும் எனத் தெரிகிறது
பயண நேரம் எவ்வளவு?: தற்போது கோவை - பெங்களூர் ரூட்டில் ஏற்கனவே செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த ரயில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூரு செல்ல 6 மணி நேரம் 45 நிமிடம் எடுத்துக் கொள்கிறது புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5 மணி நேரம் 40 நிமிடத்தில் போய்விட முடியும். பயண நேரம் கணிசமாக மிச்சம் அடைவதால் பயணிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
எங்கு நின்று செல்லும்: கோவையில் இருந்து பெங்களூருக்கு பல்வேறு ஆம்னி பேருந்துகள் இயங்குகின்றன. இவற்றில் சென்றால் குறைந்தபட்சம் 7 மணி நேரம் பிடிக்கும். இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் பயணிகள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மற்றும் ஓசூர் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications