வணக்கம் வைக்கலையாம்.. அதுதான் வெட்டிருக்காங்க.. பல்லாவரம் பட்டாக் கத்தி மோதலின் பரபர பின்னணி!
கல்லூரி மாணவர்கள் மீண்டும் பட்டா கத்தியுடன் மோதிக் கொண்டனர்
Recommended Video
சென்னை: வணக்கம் வெக்கலையாம்.. இதுதான் பிரச்சனை.. அதனால் காலேஜ் கேட் வாசலிலேயே நிற்க வைத்து, மாணவனை அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார் சட்டம் படிக்கும் சக மாணவன்!
ரூட் தல விவகாரத்தில் போலீசார் செய்த கெடுபிடியால் இப்போதுதான் மாணவர்கள் அடங்கி உள்ளதாக நினைத்தால், திரும்பவும் ஆரம்பித்து விட்டார்கள்.
கல்லூரி மாணவர்கள் பஸ் தவிர, ரயில்களிலும் காலேஜிக்கு வந்து போவார்கள். அப்படி வரும்போது, கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடனே ரயிலில் பயணம் செய்வார்கள்.

வீடியோக்கள்
அந்த சமயங்களில் ஆயுதங்களை தரையில் தேய்த்து சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதையும் வழக்கமாக கொண்டிருப்பர். இது சம்பந்தமான வீடியோக்கள் வெளியாகியதுடன், போலீசாரும் இவர்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தனர்.

எச்சரிக்கை
ஆனால் சில மாதங்களுக்கு முன்பு, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ்சுக்குள்ளேயே மோதி கொண்டனர். நடு ரோட்டில் அரிவாள் வெட்டும் நடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனால் சென்னை போலீசாரும் கல்லூரி மாணவர்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து, கடுமையாக எச்சரித்தே வைத்திருந்தனர்.

சண்டை
இப்போது மீண்டும் பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டுள்ளனர். பல்லாவரம் கல்லூரி மாணவர்கள் இடையே இந்த சண்டை எழுந்துள்ளது. இவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக சட்ட மாணவர்கள் ஆவர். இங்கு கார்த்திக் என்ற மாணவர் 5-ம் வருடம் படித்து வருகிறார். அதேபோல, அஸ்வின் என்ற மாணவர், வேறு ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, இந்த கல்லூரியில் 5-ம் வருடம் புதிதாக வந்து சேர்ந்துள்ளார்.

கார்த்திக்
இங்கு கார்த்திக் சீனியர் என்பதால் ரவுடி போலவே வலம் வந்துள்ளார். கார்த்திக்கை எந்த மாணவர்கள் பார்த்தாலும் பயந்து நடுங்குவார்களாம்.. எல்லாரும் கார்த்திக்கு மரியாதை தந்துதான் ஆகணுமாம். ஆனால் அஸ்வின் கார்த்திக்குக்கு மரியாதை தரவில்லை என்று தெரிகிறது. கார்த்திக்கை பார்க்கும்போது, அஸ்வின் வணக்கம் வைப்பது இல்லையாம். இதுதான் கார்த்திக்கின் ஆத்திரம்!

வணக்கம்
இன்று காலேஜ் கேட் வாசலில் கார்த்திக் நின்று கொண்டு இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த அஷ்வின், வழக்கம்போல் கார்த்திக்கை பார்த்ததும் வணக்கம் வெக்காமல் அவரை கடந்து சென்றுள்ளார். ஏற்கனவே செம கடுப்பில் இருந்த கார்த்திக், அஸ்வின் தன்னை பார்த்தும் கண்டுக்காமல் செல்லவும், அங்கேயே கேட்டில் நிற்க வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளார். இதில் அஸ்வினுக்கு படுகாயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, அவரைஉடனடியாக கிரீம்ஸ் ரோடில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அதிர்ச்சி வீடியோ
மாணவர்களிடையே இப்படி ஒரு மோதல் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள். காலேஜ் வாசலில் கார்த்திக், அஸ்வினை அரிவாளால் வெட்டிய வீடியோ வெளியாகி உள்ளது. இதை கண்டதும், மக்கள் மேலும் பீதியிலும், கலக்கத்திலும் உறைந்துள்ளனர்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக்












Click it and Unblock the Notifications