சிம்பு நடித்த படத்தில் நடித்த நடிகர் வடிவேலுவின் தம்பி! ஜெகதீசன் உடலுக்கு வைகைப்புயல் கண்ணீர் அஞ்சலி
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீசன் பார்ப்பதற்கு அச்சு அசல் அவரை போலவே இருக்கிறார். அவரும் ஒரு படத்தில் நடித்திருக்கிறாராம்.
வைகைப்புயல் வடிவேல்! இன்று இவருடைய டெம்ப்ளேட் இல்லாத மீம்ஸே இல்லை. அந்த அளவுக்கு அனைத்து சிசுவேஷன்களுக்கும் பக்காவாக பொருந்தக்கூடிய முகபாவனைகளை கொண்டவர் வடிவேலு.

வடிவேலுவின் தந்தை கண்ணாடி அறுக்கும் தொழிலை செய்து வந்தார். இந்த நிலையில் இவருடைய தந்தை திடீரென இறந்துவிடவே வடிவேலு தனது சகோதரர்களுடன் இணைந்து இதே தொழிலை செய்து வந்தார்.
மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காமெடி கேரக்டர்களில் உள்ளூர் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது 1988ஆம் ஆண்டு டி ராஜேந்தரின் என் தங்கை கல்யாணி படத்தில் சிறிய கேரக்டர் நடித்திருந்தார். சென்னைக்கு ரயிலில் வரும் போது ராஜ்கிரணை வடிவேல் சந்தித்தார். அப்போதுதான் வடிவேலுவை என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க சிபாரிசு செய்திருந்தார்.
1990களில் கவுண்டமணி- செந்தில்- வடிவேல் காம்பினேஷன் அட்டகாசமாக இருந்தது. இதையடுத்து வடிவேலுவை விஜயகாந்த் ஆதரித்து சின்ன கவுண்டர் படத்தில் காமெடி ரோல் கொடுத்தார். இப்படியாக வடிவேல் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிறந்த காமெடியனுக்காக 3 முறை தமிழக அரசு விருதுகளை வாங்கியுள்ளார்.
வடிவேலுவுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் 3 பேர், இரு தங்கைகள் உள்ளனர். வடிவேலு சினிமாவில் சம்பாதிக்கத் தொடங்கியதும் தன்னுடன் பிறந்தவர்களுக்கு திருமணம் செய்து வைத்து அவர்களை கரையேற்றினார். இதை வடிவேலுவின் தம்பியே ஒரு முறை பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அந்த அளவுக்கு குடும்பத்தினர் மீது பாசம் கொண்டவர் வடிவேல் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வடிவேலுவின் வீட்டில் ஒரு துக்க நிகழ்ச்சி நடந்துள்ளது. வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸன் இறந்துள்ளார். இவர் மதுரையில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். டி.ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்திலும் நடித்திருந்தார்.
அந்த ஒரு படத்துடன் சினிமாவில் நடிப்பதை ஜெகதீசன் நிறுத்திக் கொண்டு ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இதனிடையே கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஜெகதீசன் இன்று சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். ஜெகதீஸ்வரன் பார்ப்பதற்கு அப்படியே வடிவேலுவை போல் இருக்கிறார்.
இறந்த ஜெகதீசனுக்கு அமைச்சர் மூர்த்தி நேரில் அஞ்சலி செலுத்தினார். சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவின் தாயார் மறைந்தார். இந்த நிலையில் தம்பியின் மரணம் வடிவேலுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications