சூப்பர்.. வணிக வரித்துறையின் "ஆக்ஷன்:.. வருமான வரியை கட்ட சொல்றது இதுக்குதான்.. திணறிய சவுகார்பேட்டை
சென்னை: வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விட்டு, அதன்மூலம் 3.90 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை அறிவித்துள்ளது.
வருமானவரியை தவறாமல் அனைவரும் செலுத்திவிட வேண்டும் என்று தொடர்ந்து அரசு வலியுறுத்தி வருகிறது..அப்படியிருந்தும்கூட, வரிஏய்ப்பு நடந்து கொண்டுதானிருக்கிறது.. குறிப்பாக, மாத சம்பளம் பெறுபவர்கள் பலரும், வீட்டு வாடகைக்கு போலி ரசீதுகளை சமர்பித்து, வருமான வரி விலக்கு பெறுவது பரவலாக நடக்கிறது.

வரி ஏய்ப்பு: அதனால்தான், வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளம் பெறுபவர்களை கண்டறிய, வருமான வரித் துறை புதிய சாப்ட்வேரை சமீபத்தில் மத்திய அறிமுகப்படுத்தியது..
இந்த சாப்ட்வேரை பயன்படுத்தி, யாரெல்லாம் வரிஏய்ப்பு செய்கிறார்களோ, அவர்கள் மீது 200 சதவீதம் வரை அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.. சம்பந்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப் போவதாகவும் மத்திய அரசு கூறியிருந்தது.
இதனிடையே, வருமான வரி முதன்மை தலைமை ஆணையரும், தலைமை இயக்குநருமான (புலனாய்வு)சுனில் மாத்தூர், கடந்த வாரம் ஒருவிழாவில் பேசும்போது, "வரும் 2023-24 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் மொத்த வரி வருவாய் இலக்கு ரூ.33.60 லட்சம் கோடியாகவும், இதில் நேரடி வரி வசூல் ரூ.18.30 லட்சம் கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வரி ஏய்ப்புக்கு எதிரான தடுப்புநடவடிக்கைகளையும் வருமான வரித் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
வரிஏய்ப்பு: வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நேர்மையாக வரி செலுத்துவோர் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் புலனாய்வு பிரிவு 2022-23-ம் நிதி ஆண்டில் 81 சோதனைகளும், பறிமுதல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதில் ரூ.120 கோடி ரொக்கம், ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் என மொத்தம் ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. குறிப்பாக, கணக்கில் காட்டப்படாத ரூ.5,200 கோடி வருமானமும் கண்டறியப்பட்டது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், வரிஏய்ப்பு நடவடிக்கைகளில் வணிகவரித்துறையும் அதிரடி காட்டி வருகிறது.. அதாவது, வரி செலுத்தாத நிறுவனங்களின் சொத்துகளை ஏலம் விட்டு, அதன்மூலம் 3.90 கோடி ரூபாய் வசூலித்து இருப்பதாக, வணிக வரித்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வணிக வரி ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு இதுதான்:

வரி ஏய்ப்புகள்: "சென்னை வடக்கு கோட்டத்தில், 'மோனிகா மெட்டல்ஸ்' என்ற நிறுவனத்தில், 2012ல் திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, போலி ரசீதுகள் வாயிலாக, அதிக உள்ளீட்டு வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. பத்து ஆண்டுகளாக வரி பாக்கியை செலுத்தாததால், சவுகார்பேட்டையில் உள்ள நிறுவன சொத்துக்கள் முடக்கப்பட்டு, ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், ஏல நடவடிக்கையை தொடரவும் உத்தரவிட்டது.பிறகு, ஜூலை 21ல் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டன. இதன் வாயிலாக, அரசுக்கு வர வேண்டிய, 3.90 கோடி ரூபாய் வரி பாக்கி வசூல் செய்யப்பட்டு, கருவூலத்தில் செலுத்தப்பட்டது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications