சமூக நீதியை கண்காணிக்க குழு அமைப்பு... யாரெல்லாம் இதில் இடம்பெறுகிறார்கள் தெரியுமா..?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூகநீதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதுவும் சமூகநீதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு இன்றுடன் நூற்றாண்டு காணும் தருணத்தில் இத்தகைய சிறப்பு குழுவை அவர் நியமனம் செய்யவிருக்கிறார்.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பு, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவைகளில் சமூக நீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன.

 Committee structure to monitor social justice in tamilnadu

இந்நிலையில் அண்மைக்காலமாக சமூகநீதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றுவதில்லை எனவும் சமூக நீதி தேய்பிறையாகி வருவதாகவும் புகார்கள் எழும் நிலையில், சமூக நீதியை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக சமூகநீதியை காக்க போராடியவர்கள் வரவேற்றுள்ளனர். கண்காணிப்பு குழு மூலம் தமிழகத்தில் சமூக நீதி நிலை நிறுத்தப்படும் என்ற நம்பிக்கையை மு.க. ஸ்டாலின் அளித்துள்ளார்.

இந்தக் குழுவில் அரசு அதிகாரிகள், கல்வியாளர்கள், சட்ட வல்லுநர்கள், உள்ளிட்டோர் இடம் பெறவுள்ளார்கள். சமூக செயற்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடும் சீரிய பட்டறிவும் கொண்டவர்கள் இந்தப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படவுள்ளார்கள். இவர்கள் மூலம் சமூகநீதியின் அளவுகோலானது சட்டப்படி இருக்கிறதா, முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும்.

சமூகநீதி உரிய முறையில் பின்பற்றபடாவிட்டால் அது குறித்த தகவலை இந்தக் குழு அரசுக்கு அளித்து நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யும். இதனிடையே சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், நீதிக்கட்சி ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஆணை 1921லிருந்து தான் சமூக நீதி வரலாறு தொடங்குகிறது எனக் கூறியிருக்கிறார்.

மேலும், அனைத்துச் சமூகத்தினரும் ஏற்றம் பெறும் வகையில் மக்கள் தொகையின் அடிப்படையில் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இத்தகைய சமூக நீதி புரட்சிக்கு வித்திட்ட பி.டி.ராஜன், தியாகராயர், நடேசன் முதலியார்,பனகல் அரசர் போன்ற முன்னேடிகளை நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறியிருக்கிறார்.

இந்நன்னாளில் சமூக நீதி கண்காணிப்பு குழு அமைப்பதில் தாம் பெருமை அடைவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+