சீமான் பிடிவாதம் பிடிப்பது நல்ல பண்பல்ல... மன்னிப்பு கோர வேண்டும்- தா.பாண்டியன்
Recommended Video
சென்னை: ராஜீவ்காந்தி கொலை தொடர்பான பேச்சுக்காக சீமான் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அவர் இந்த விவகாரத்தில் பிடிவாதம் பிடிப்பது நல்ல பன்பல்ல எனவும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 13-ம் தேதி விக்ரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்த நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டார். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதோடு சீமான் பேச்சு தொடர்பாக விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில் கருத்துக்கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சீமான் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும், போகிற போக்கில் எதையாவது பேசவேண்டும் என்பதற்காக பேசிவிட்டு செல்லக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும், ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அருகில் இருந்து காயமடைந்து பாதிக்கப்பட்டவன் தாம் எனக் கூறினார்.
இப்போது இவ்வளவு பேசும் சீமான் அப்போதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் என வினவியுள்ளார். மேலும், ராஜீவ் கொலை குறித்தும், அந்த இடத்தில் காயமடைந்து தாம் உயிர்பிழைத்தது பற்றியும் தன்னை சந்திக்கும் போதெல்லாம் சீமான் கேட்டுத்தெரிந்துகொண்டும் இப்படி பேசுவது நியாயமா என வினவியுள்ளார்.
சீமான் பிடிவாதம் பிடிப்பதை கைவிட்டு தனது பேச்சுக்கு மன்னிப்பு தெரிவிக்க வேண்டும், அவ்வாறு அவர் செய்ய தவறினால் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார். இறந்தவர்களை பற்றி பேசுவது மனிதத்தன்மையே இல்லாதவர்கள் செய்யும் செயல் என விமர்சித்துள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications