Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“ஒரு நாளைக்கு 1 லட்சம் டன் கனிம வளங்கள் கர்நாடகாவுக்கு போகுது..” லாரி உரிமையாளர் சங்கம் குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை அதிகரித்திருப்பதாகவும், இப்படியே போனால் 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மலைகளே இல்லாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "தினமும் தமிழ்நாட்டிலிருந்து மலைகள் உடைக்கப்பட்டு 1 லட்சம் டன் கனிமங்கள் கர்நாடகாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் சுமார் 5000 கிரஷர்கள் அனுமதி இல்லாமல் இயங்கி வருகின்றன. காஞ்சிபுரத்தில் மட்டும் 162 கிரஷர்கள் இயங்கி வருகின்றன. மலையை தெய்வமாக வழிபட்டு வரும் திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிக அளவு மலைகளை வெட்டி எடுக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

tamil nadu mineral

இந்த கிரஷர்கள் ஒரு மணி நேரத்திற்கு 500 டன்களை அரைக்கும் திறன் கொண்டது. அதாவது மலைகளை சிறிய பாறைகளாக வெட்டி, பின்னர் கிரஷர்கள் மூலம் துண்டுகளாக்கப்பட்டு கடத்தப்படுகிறது. இப்படியான கிரஷர் இயந்திரங்கள் இந்தியாவில் வேறு எங்கும் கிடையாது. செங்கல்பட்டில் ஒரு பழைய அமைச்சருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அரசு அதிகாரிகளும், நிர்வாகத்துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? கனிமவளத் துறையில் போய் கேட்டபோது, நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை என்று சொல்கிறார்கள். மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதி வழங்கியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். அங்கு சென்று கேட்டால், மாசு நடக்கிறதா என்பதை ஆய்வு செய்வது மட்டும்தான் எங்களுடைய வேலை. கொள்ளை தடுப்பது எங்களுடைய வேலை இல்லை என்று சொல்கிறார்கள்.

இப்படி தமிழ்நாட்டில் இயங்கும் 5000 கிரஷர்களுக்கு சட்டதிட்டங்கள் எதுவும் கிடையாது. சட்டதிட்டங்கள் வகுக்கப்பட்டால் கனிமவள கொள்ளையடிக்க முடியாது என்பதால் சட்டம் எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த முறைகேட்டை படித்த அதிகாரிகளே செய்கிறார்கள்.

இதில் நாங்கள் எங்கே சிக்குகிறோம் என்றால், கிரஷரில் அரைக்கப்படும் கனிமங்கள் எங்களுடைய லாரியில் தான் எடுத்துச் செல்லப்படுகிறது. தனிமங்களை நாங்கள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடங்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்களுடைய பணி. ஆனால் நாங்கள் கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுவதைப் போல லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிணையில் வர முடியாதபடி சிறையில் அடைக்கப்படுகிறார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜகபர் அலி, லாரி மோதி பலியானார். ஆனால் இந்த சம்பவம் திட்டமிட்ட கொலை என்று பல்வேறு அமைப்புகளும் விமர்சித்து வருகின்றன. இதனையடுத்து குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளை நடத்தப்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் விமர்சித்திருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+