Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே இருட்டு.. சுற்றி அடித்த சூறைக்காற்று.. சென்னையில் நிலவரம் என்ன? தலைநகரில் இதை நோட் பண்ணீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் இரவில் தொடங்கிய கனமழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.

வடகிழக்கு பருவமழையின் வீரியம் தமிழ்நாட்டில் அதிகரித்து உள்ளது. கடந்த வாரம் சென்னையில் பெய்ததை விட இந்த வாரம் மிக அதிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

முக்கியமாக அடுத்த மூன்று நாட்கள் சென்னையில் பல பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை

சென்னை

சென்னையில் நேற்று மாலை பெய்த கனமழை என்பது இந்த மழையின் தொடக்கம்தான். இன்று அதிகாலையில் இருந்துதான் மழை தீவிரம் அடைந்து உள்ளது. அதோடு இன்று மாலைக்கு பின் மழை மேலும் தீவிரம் அடையும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம் சென்னையில் மழை பெய்த போது பல இடங்களில் தண்ணீர் வேகமாக வடிந்தது. 300 மிமீ மழையை கூட சென்னை எளிமையாக சமாளித்தது. ஆனால் இன்று அதை விட அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை வெள்ளம்

சென்னை வெள்ளம்

இதனால் மழையை சென்னை சமாளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையில் இன்று அதிகாலையில் இருந்து மிக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை 8 மணி கடந்த பின்பும் கூட சென்னை இருட்டாக காணப்பட்டது. அதிகாலை 4 மணி போல சென்னை கும்மிருட்டாக இருந்தது. கடந்த வாரங்களில் மழை பெய்தாலும் காலை 8 மணியில் இருந்து மாலை வரை கொஞ்சம் வெப்பம் இருந்தது. அதன்பின் மீண்டும் மாலைக்கு பின் மழை பெய்தது.

மழை

மழை

ஆனால் இன்று சென்னையில் அதிகாலையில் இருந்து விடாமல் மழை பெய்து வருகிறது. அதோடு சென்னையில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை போல கனமான மழை பெய்தது. அதாவது "பொத்து பொத்து" என்று கனமாக மழை அடித்து ஊற்றியது. சில இடங்களில் சூறை காற்று வீசியது. காற்றின் வேகம் மிக அதிகமாக இருந்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது.

விடாமல் மழை

விடாமல் மழை

அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. மேலும் 3- 4 மணி நேரங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. சென்னை - புதுச்சேரி நெடுஞ்சாலையில் கனமழை பெய்து வருகிறது. வங்ககடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து கொண்டே வருகிறது. இது அடுத்த இரண்டு நாட்களுக்கு வடக்கு நோக்கி நகரும். இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் கனமழை பெய்யும். இன்று சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+