Sabesh: "சபேஷா இனி உன்னை எப்போ பார்ப்பேன்" இறுதி ஊர்வலத்தில் கைகுட்டையால் கண்ணீரை துடைத்து அழுத தேவா
சென்னை: தனது சகோதரர் சபேஷின் இறுதி ஊர்வல வாகனத்தில் அவரது முகத்தை பார்த்தபடியே தேவா கண்ணீர் விட்ட காட்சிகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தனது வளர்ச்சிக்கு வித்திட்ட சபேஷ், இன்று இல்லையே என நினைத்து கண்ணீரை துடைத்தபடி அவர் இருந்தார்.
எம்.சி. சபேசன் (M.C. Sabesan), சபேஷ் என அறியப்பட்டவர். இவர் உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் அக்டோபர் 23, 2025, வியாழக்கிழமை அன்று பிற்பகல் 12:15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

சபேஷ் அவர்களின் இறுதிச் சடங்குகள் அக்டோபர் 24, 2025 அன்று மாலை 3 மணிக்குச் சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இவர் தனது இரட்டைச் சகோதரர் முரளியுடன் இணைந்து 'சபேஷ்-முரளி' என்ற பெயரில் தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களாக வலம் வந்தனர்.
இவர்கள் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இவர்களின் இசையமைப்பில் வெளியான குறிப்பிடத்தக்கப் படங்கள்: சமுத்திரம், தவமாய் தவமிருந்து, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, பொக்கிஷம், மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், மிளகா உள்ளிட்டவை ஆகும்.
ஜோடி (A.R. ரஹ்மான் பாடல்கள் அமைத்த படம்), ஆட்டோகிராஃப், தலையங்கம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் போன்ற பல படங்களுக்குப் பின்னணி இசையமைப்பிலும் தனி முத்திரை பதித்தனர்.
சபேஷ் இசையமைப்பதுடன், சில பாடல்களைப் பாடியும் உள்ளார். 'கோத்தல் சாவடி லேடி' (கண்ணெதிரே தோன்றினாள்), 'ஒட்ட ஒடசல்' (கோரிப்பாளையம்), 'காத்தடிக்குது காத்தடிக்குது' (நினைவிருக்கும் வரை) போன்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரர்களான சபேஷ் மற்றும் முரளி இருவரும், தங்கள் அண்ணன் தேவாவின் இசைக் குழுவில் உதவி இசையமைப்பாளர்களாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். பிரபல இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா, சபேஷின் மூத்த சகோதரர் ஆவார்.
சபேஷின் குடும்பம் இசையுடனும் நடிப்புடனும் ஆழமான தொடர்பு கொண்டது. இவரது மகன் கார்த்திக் சபேஷ் ஒரு நடிகர். இவரது அண்ணன் மகன்கள் நடிகர் ஜெய் மற்றும் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவர். முரளியின் மகன் போபோ சசியும் இசையமைப்பாளர் ஆவார்.
சபேஷ் மறையும் வரை திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் (Cine Musicians Union) தலைவராகப் பதவி வகித்தார்.
சபேஷின் மறைவு தமிழ் திரையுலகில், குறிப்பாக இசைத்துறையில் ஒரு பெரும் இழப்பாகக் கருதப்படுகிறது. அவரது சகோதரர் தேவா உட்பட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் சபேஷின் உடல் இன்று வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்காக அவரது வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் தொடங்கியது. அந்த வாகனத்தில் சபேஷின் 4 சகோதரர்கள் அமர்ந்திருந்தனர்.
தேவா கண்ணீர் விட்டபடியே இருந்தார். சபேஷின் உடலை பார்த்து பார்த்து அழுது கொண்டிருந்தார். வந்தவர்கள் எல்லாம் "தேவாவுக்கு எப்படி ஆறுதல் சொல்வது" என வருந்தினர்.
-
மண்டைக்கேறிய போதை.. ரம்யாவின் படுக்கையறையில் புகுந்த சென்னை போலீஸ்காரர்.. மறு நொடியே பிக் ட்விஸ்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தாலும் சிக்கல் வராது.. ஆனால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் மறக்காதீங்க! -
சென்னை மக்களே 'கரண்ட் பில்' இன்னும் கட்டவில்லையா.. மின்சார வாரியம் மிக முக்கிய அறிவிப்பு -
பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு நிபந்தனைகள் தளர்வு! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
“அரசு எங்களை ஏமாத்திருச்சு..” தேர்தல் நேரத்தில் போராட்டத்தை கையில் எடுக்கும் டாஸ்மாக் பணியாளர்கள்! -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு மழை வெளுக்க போகுது.. தென் தமிழகத்திலும் மழை கொட்டும்.. வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications