சென்னை ஐஸ் அவுஸில் தன்னார்வலருக்கு கொரோனா.. உணவு வாங்கி சாப்பிட்ட போலீஸ் உள்பட 80 பேர் அதிர்ச்சி
சென்னை: சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரிடம் உணவு வாங்கி சாப்பிட்ட காவலர்கள், மின் ஊழியர்கள், சாலையோரம் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்தும் தமிழகம் முழுவதும் மூடப்பட்டுள்ளன.
சென்னையில் ஊரடங்கில் சில உணவகங்களே திறந்து உள்ளன. அந்த உணவகங்களிலும் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் மட்டுமே தருகிறார்கள்.

உணவு அளிக்கிறார்கள்
இதனால் ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்ல முடியாத பலர் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இதனால் தன்னார்வலர்கள் சிலர் தாங்களாகவே வீடுகளில் உணவு சமைத்து பார்சல் மூலம் சாலையோரம் பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள். இதேபோல் 24 மணி நேரமும் மக்கள் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாருக்கும் தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகிறார்கள். மேலும் துப்புரவு பணியாளர்கள், மின்வாரிய ஊழியர்களுக்கும் தன்னார்வலர்கள் உணவு அளித்து வருகிறார்கள்.

உணவு விநியோகம்
அந்த வகையில் சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் தன்னார்வலர் ஒருவர் தனது வீட்டில் சமைத்த உணவுகளை தினமும் ஐஸ் அவுஸ் பகுதியில் சாலையோரம் வசிக்கும் மக்களுக்கு, போலீசாருக்கு, மாநகராட்சி ஊழியர்களுக்கு, மின்வாரிய ஊழியர்களுக்கு உணவு பொட்டங்களாக வழங்கி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக அவர் உணவு வழங்கி வந்தார்.

சோதனையில் உறுதி
இந்நிலையில் அந்த தன்னார்வலருக்கு காய்ச்சல் மற்றும் சளி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்று முன்தினம் ஓமந்தூரார் அரசினர் தோட்ட மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்தார். அந்த பரிசோதனையில் உணவு வழங்கிய தன்னார்வலருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து சுகாதார துறை அதிகாரிகள் அவரை கொரோனாவுக்காக மாற்றப்பட்டுள்ள பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பிசிஆர் சோதனை
இதையடுத்து சுகாதார பணியாளர்கள், தன்னார்வலரிடம் தினமும் உணவு வாங்கி சாப்பிட்ட நபர்கள் குறித்து கணக்கெடுத்தனர். அப்போது ஐஸ் அவுஸ் பகுதியில் 40 காவலர்கள், மின்வாரிய ஊழியர்கள்,, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் சாலையோரம் வசிக்கும் மக்கள் என 80க்கும் மேற்பட்டோர் தினமும் அந்த தன்னார்வலரிடம் உணவு வாங்கி சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள மாநகாட்சி சுகாதார மையத்தில் அனைவரும் நேற்று காலை ஒரே நேரத்தில் குவித்தனர். அவர்களில் குறிப்பிட்ட நபர்களுக்குமே மட்டுமே பிசிஆர் சோதனை செய்யப்பட்டது. மற்றவர்களை அரசு மருத்துவனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனால் ஐஸ் அவுஸ் பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications