ப.சிதம்பரத்தை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்...! யார் நடத்தியது தெரியுமா?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் குதித்தனர். ஆனால், முன்னாள் மத்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான சிபிஐ கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் பெரியளவில் அக்கட்சியினர் போராட முன்வரவில்லை.

இதையடுத்து கர்நாடக காங்கிரஸை பார்த்து சுதாரித்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, போராட்ட நெருப்பை கட்சியினரிடம் பற்ற வைத்தார். அதன் எதிரொலியாக கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை, கோவை, சிவகங்கை, உள்ளிட்ட நகரங்களில் மோடி அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக திகழும் சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவையினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, ஹசீனா சையத் உள்ளிட்ட நிர்வாகிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்ததோடு, உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் தொடர் சொற்பொழிவும் ஆற்றினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications