ப.சிதம்பரத்தை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம்...! யார் நடத்தியது தெரியுமா?
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திகார் சிறையில் இருந்து விடுவிக்கக்கோரியும், மத்திய அரசைக் கண்டித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவை சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டத்தில் குதித்தனர். ஆனால், முன்னாள் மத்திய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான சிபிஐ கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தில் பெரியளவில் அக்கட்சியினர் போராட முன்வரவில்லை.

இதையடுத்து கர்நாடக காங்கிரஸை பார்த்து சுதாரித்துக்கொண்ட தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, போராட்ட நெருப்பை கட்சியினரிடம் பற்ற வைத்தார். அதன் எதிரொலியாக கன்னியாகுமரி, சிவகங்கை, மதுரை சென்னை, உள்ளிட்ட மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், சென்னை, கோவை, சிவகங்கை, உள்ளிட்ட நகரங்களில் மோடி அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஒரு அங்கமாக திகழும் சோனியாகாந்தி மகளிர் நற்பணி பேரவையினர் இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டதுடன், மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா, ஹசீனா சையத் உள்ளிட்ட நிர்வாகிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத பந்தலில் அமர்ந்திருந்ததோடு, உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில் தொடர் சொற்பொழிவும் ஆற்றினர். தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் தங்கபாலு உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி!












Click it and Unblock the Notifications