இந்தியா முன்னேறி இருப்பதற்கு காரணம்… காங்கிரஸ் தான்… கே.எஸ். அழகிரி பெருமிதம்
சென்னை: காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை எதிர்ப்பவர்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவர்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் துவங்கிய காலம் முதல் திட்டமிட்ட பொருளாதார கொள்கையை அறிமுகம் செய்து, நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் மகத்தான சாதனை புரிந்துள்ளது.
நாடு சுதந்திரம் பெற்றபோது முதல் நிதி அமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை 240 கோடி ரூபாய். சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் சமர்ப்பித்த பட்ஜெட் தொகை 25 லட்சம் கோடி ரூபாய். கடந்த 72 ஆண்டுகளில் 55 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு.
உலக நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருப்பதற்கு காங்கிரஸின் பங்கு மகத்தானது. நாட்டிலிருந்து வறுமையை நிரந்தரமாக விரட்டும் வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை உள்ளது.
இந்த அறிக்கையை எதிர்ப்பவர்கள் அரசியல் உள்நோக்கம் உடையவர்கள். அவர்களின் எதிர்ப்பு, நாட்டை மக்களால் நிராகரிக்கப்படும். வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் அமோக ஆதரவு தருவர் என்பது உறுதி என்றும் கூறியுள்ளார்.