மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் கூட்டணி?.. பரபரப்பு விளக்கமளித்த தினேஷ் குண்டுராவ்!
சென்னை: மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் 41 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் வென்றது.
இந்த நிலையில் இந்த முறை திமுகதான் ஆட்சி அமைக்கும் ன சொல்லப்படும் நிலையில் அக்கட்சி தொகுதி பங்கீடு, தொகுதிகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவற்றில் மிகவும் கவனமாக கையாண்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறை 30 தொகுதிகளை ஒதுக்குமாறு கேட்டு வருகிறது. ஆனால் திமுகவோ வெறும் 20 முதல் 24 வரை மட்டுமே ஒதுக்க முடியும் என கறார் காட்டி வருகிறது. இதனால் காங்கிரஸ்- திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது.

30 தொகுதிகள்
அதே வேளையில் ராகுல் காந்தியும் 30 தொகுதிகளுக்கு குறையாமல் பெற வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்குமா இல்லை வேறு ஒரு கூட்டணிக்கு அணி மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

தினேஷ் குண்டுராவ்
இந்த நிலையில் காங்கிரஸ் மக்கள் நீதி மய்யத்துடன் இணையும் என்றே தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப கமல் கட்சியில் இணைந்த பழ கருப்பையாவும் நேரடியாகவே தூக்கி போட்டுட்டு வாங்க என அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் விளக்கம் அளித்துள்ளார்.

யூகங்கள்
அவர் கூறுகையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். நாளையோ அல்லது நாளை மறுநாளோ நல்ல முடிவு எட்டப்படும். தொகுதி பங்கீடு தொடர்பான யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் என்னால் பதில் அளிக்க முடியாது.

தொகுதிகள்
மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசியதாக வெளியான தகவலில் உண்மையில்லை என தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். இதனால் 3ஆவது அணியில் இணைய காங்கிரஸ் தயக்கம் காட்டுகிறதா இல்லை திமுகவே இவர்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க முன் வந்துள்ளதா என்பது போக போகத்தான் தெரியும்.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications