'நாய்கள்' .. செல்வப்பெருந்தகை சொன்னதுமே சட்டென குறுக்கிட்ட சபாநாயகர்.. அண்ணாமலை ரியாக்சனை பாருங்க
சென்னை: காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற யூகத்தில் பேசுகிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்புவதற்காக தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் இன்று நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்த தனித்தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேசினார்கள்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ராஜ்பவனில் 45 நாட்களுக்கு மேலாக தூங்குகிறது. இது தவறு- மத்திய அரசில் உள்ள பாஜக அரசின் ஆட்டம் எல்லாம் இன்னும் ஐந்து அல்லது ஆறு மாதங்கள் தான். புதிய ஆட்சி மத்தியில் ஏற்படும். அதற்கு வழிகாட்டியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பார். அண்ணா பல்கலைக்கழகம் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு பல்வேறு ஊழல்கள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதைப் பற்றி ஆளுநர் பேசுவாரா? சமூக நீதியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஆளுநர் மாளிகையை அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். கூடாரமாக மாற்றி வருகிறார்.
தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளாகியுள்ளார். ஆளும் அரசின் மீது வன்மத்தோடு செயல்பட்டு வருகிறார். ஆளுநரின் நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருந்தன்மையோடு மன்னித்து வருகிறார். முதல்வர் முன்மொழிந்த தனித்தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முழுமையாக ஆதரிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
முன்னதாக சட்டசபையில் பேச ஆரம்பிக்கும் போது செல்வப்பெருந்தகை சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மாண்புமிகு அமைச்சர்கள் வீடுகளில் எல்லாம், ஏதோ நாய் நுழைவது போல் நுழைகிறார்கள்.. அப்போது குறுக்கிட்ட அப்பாவு அந்த வார்த்தை வேண்டாம் சட்டசபை அவை குறிப்பில் நீக்கப்படும் என்றார். அதற்கு செல்வப்பெருந்தகை.. நான் யாரையோ சொல்கிறேன்.. யாரையும் புண்படுமாறு நான் கூறவில்லை என்றார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்று பொருள்படும்படி பேசுகிறார்.
மாநிலத்தில் சிபிஐ-க்கு அளிக்கப்பட்ட பொது ஒப்புதலை திரும்பப் பெறுவது, வருமான வரித்துறை அதிகாரிகளை காயப்படுத்துவது மற்றும் அரசு அதிகாரிகளை நாய்கள் என ஊகிப்பது ஆகியவை அதிகாரங்களை ஊழல் செய்ய பயன்படுத்தியதற்காக பிடிபடுவோம் என்ற பயத்தின் விளைவு மட்டுமே" என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications